கோவையில் சுகாதாரமற்ற வீடுகள் மற்றும் கடைகளுக்கு இதுவரை சுமார் ரூ.6 லட்சம் அபராதம் விதிப்பு


தமிழக அரசின் உத்தரவின்படி, டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்காக, டெங்கு தடுப்பு பணிகளின் கண்காணிப்பு அதிகாரி ஹர்மந்தர் சிங் தலைமையில் கோவை மாநகராட்சி சார்பாக பல்வேறு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அதன்படி இன்று (அக்.,23) கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்திற்குட்பட்ட, தர்ஷினி நகர், கணபதி, வயலட் மெட்ரிக்குலேசன் பள்ளி, ஜி.என்.மில்ஸ், சுவாதி பூங்கா, சரவணம்பட்டி ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்து டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகுவதற்கு காரணமான பள்ளிகள், கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ரூ.23,500 அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும், நீர் தேங்கிய இடங்கள் மற்றும் குப்பைகூளங்களை உடனடியாக அகற்றி சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்கு மண்டலத்திற்குட்பட்ட, மருதமலை ரோடு, வடவள்ளி, சின்மயா மெட்ரிக்குலேசன் பள்ளி வடவள்ளி, கவுண்டம்பாளையம், சரவணா நகர், வி.ஓ.சி நகர், டி.வி.எஸ் நகர், ஸ்ரீ பாலாஜி வித்யா மந்திர் வீரகேரளம், சீரநாயக்கன்பாளையம், காமராஜபுரம், ஆர்.எஸ்.புரம், வேலாண்டிபானையம், காந்திநகர், எஸ்.என்.பாளையம் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்து டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதற்கு காரணமான பள்ளிகள், கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ரூ.30,500 அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது.

தெற்கு மண்டலத்திற்குட்பட்ட ஆறுமுக உதயர் வீதி, தெலுங்குப்பாளையம், சொக்கம்புதூர், பிரபா டிரேடர்ஸ், கே.வி.பாளையம், போத்தனூர், மோகன் நகர், சுந்தராபுரம், மோகன் நகர் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்து டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதற்கு காரணமான பள்ளிகள், கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ரூ.53,000- அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது. 

மத்திய மண்டலத்திற்குட்பட்ட காந்திபுரம், புலியகுளம் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்து டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதற்கு காரணமான பள்ளிகள், கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ரூ.15,000- அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டு, நீர் தேங்கிய இடங்கள் மற்றும் குப்பைகூளங்களை உடனடியாக அகற்றி சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கடந்த ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் 22-ம் தேதி வரை டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதற்கு காரணமான வீடுகள், பள்ளிகள், கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு மாநகராட்சி மூலம் மொத்தம் ரூ.4,89,000 அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. இன்று (அக்.,23) மேற்கொண்ட டெங்கு தடுப்பு பணிகளின் போது ரூ.1,22,000 அபராதம் விதிக்கப்பட்டது. கோவை மாநகராட்சி பகுதிகளில் இதுவரை ரூ.6,11,000 அபராதம் விதிக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மாநகராட்சியின் டெங்கு தடுப்பு பணிகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும், பொதுமக்கள் அனைவரும் மாநகராட்சியின் டெங்கு தடுப்பு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறும் மாநகராட்சி சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Newsletter

கல்வி, ஆராய்ச்சியில் நெறிமுறைகளில் சமரசம் கூடாது: பாரதியார் பல்கலை ஆசிரியர் தின விழாவில் வலியுறுத்தல்

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் அதேவேளையில், கல்வித் தரம், ஆராய்ச்சி நேர்மை, ஒழு...

Teachers’ Day Celebration at Bharathiar University Highlights Role of Technology and Ethics

The evolving role of educators and the importance of ethics, research integrity and social responsibility in higher educ...

ரத்தினபுரியில் வீட்டின் முன் விளையாடிய குழந்தை நிலத்தடி தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழப்பு

கோவை ரத்தினபுரி வ.உ.சி. நகரில் ஒரு வயது ஆண் குழந்தை வீட்டின் முன்பு விளையாடும்போது சரியாக மூடப்படாத நிலத்தடி தண்ணீர் தொட...

Toddler Dies After Accidental Fall into Water Sump in Coimbatore

Dhanvanth, a one-year-old child, died after he allegedly fell into an underground water sump near his house in Rathinapu...

Man Severely Beaten by Public Over Alleged Chain-Snatching Attempt Near Pappampatti

A video showing members of the public assaulting a man allegedly caught after attempting to snatch a gold chain from a w...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 புதிய மாணவர் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டுக்கான முதலாமாண்டு B.E/B.Tech மாணவர்களுக்கான YUVA 2026 வரவேற்பு ந...