கோவையில் வாலிபர் வெட்டிக்கொலை: போலீஸ் விசாரணை

கோவை அருகே வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சேதுராமன் (22). ரியல் எஸ்டேட் புரோக்கரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குளத்தூர் தட்டான் தோட்டம் என்ற பகுதியில் வாடகைக்கு குடியேறியுள்ளார். 

அவருடன் அவரது நண்பரும் நல்லாம்பாளையத்தைச் சேர்ந்தவருமான கரிகாலன் (31) என்பவரும் தங்கியிருந்தார். 

இந்த நிலையில், சேதுராமன் வீட்டில் இருந்து சத்தம் கேட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் சுகுமார், சேதுராமனை பார்க்கச்சென்ற போது அவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இது தொடர்பாக சுகுமார், சூலூர் போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது, சேதுராமன் தங்கி இருந்த அறையில் கஞ்சா பொட்டலங்கள் கண்டறியப்பட்டது. மேலும், அவர் கொலை செய்யப்பட்ட போது ஒரு பெண் அறையில் இருந்து தப்பியோடியதாகவும் தெரிகிறது. 

எனவே பெண் தகராறில் சேதுராமன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்த போலீசார் சேதுராமனுடன் உடனிருந்த கரிகாலனை தேடி வருகின்றனர். 

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...