திருநங்கைகளை பாலியல் தொழில் செய்ய வற்புறுத்துவதாக குற்றம்சாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா

கோவையில் பாலியல் தொழிலை செய்ய வலியுறுத்தி மிரட்டுவதாகக் கூறி திருநங்கைகள் மாவட்ட ஆட்சியர் வாயில் முன்பு சாலையில் படுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வரும் நிலையில் அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடாமல் தடுக்க மாவட்ட சமூக நலத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த திங்களன்று (அக்டோபர் 23) நடைபெற்ற மனு நீதி நாள் முகாமின் போது திருநங்கைகள் மாயா லைலா, கல்பனா, தனுஸ்ரீ ஆகிய மூவரும் தங்களை சில திருநங்கைகள் பாலியல் தொழிலை தொடரச் சொல்லி வற்புறுத்துவதாகவும், அவர்களிடம் உள்ள தங்கள் பணத்தை மீட்டுத் தரக்கோரியும் மனு அளித்திருந்தனர்.

இது தொடர்பாக கோவை துடியலூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மூவரையும் போலீசார் சமாதானப்படுத்த மட்டுமே முயற்சித்ததாகவும் தீர்வு பெற நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மூவரும் குற்றம்சாட்டியிருந்தனர்.

இந்நிலையில், இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மாயா லைலா, கல்பனா, தனுஸ்ரீ ஆகிய மூவரும் ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு சாலையில் படுத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.



இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் மூவரையும் சமாதானப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...