வால்பாறை பகுதியில் சிறுத்தைபுலி தாக்கி காளை மாடு பலி

வால்பாறை அடுத்துள்ள ஸ்டேன்மோர் எஸ்டேட் பகுதியில் சிறுத்தைபுலி தாக்கி காளை மாடு உயிரிழந்ததைத் தொடர்ந்து சிறுத்தைப் புலியை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறை அடுத்துள்ள ஸ்டேன்மோர் எஸ்டேட்டில் சுரேஷ் என்பவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார். இன்று அதிகாலை ஸ்டேன்மோர் குடியிருப்புப் பகுதியில் அவரது கால்நடைகள் மேய்ந்து கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த சிறுத்தைபுலி ஒன்று காளை மாட்டை தாக்கிக் கொன்றது.

இதேப்போன்று நேற்று மாலை நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தைப்புலி அங்கு வளர்ப்பு கோழிகளை வேட்டையாடிச்சென்றது. 

வால்பாறைக்கு உட்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் தொடர்ந்து சிறுத்தைப் புலிகள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் வனத்துறையினர் விரைந்து கூண்டு வைத்து அவற்றை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...