பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் சார்பாக டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம்


கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் சமூக பணித் துறை மாணவர்கள் சார்பாக ரத்தினபுரி பகுதியில் டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று நடைபெற்றது.



பரவி வரும் டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் செயல்முறைகள், டெங்கு கொசு உருவாவதை தடுப்பது மற்றும் சுத்தமான சூழலை உருவாக்குவது பற்றிய தகவல்களை பொதுமக்களிடம் கொண்டு செல்வதற்காக கோவை மாநகராட்சியோடு இணைந்து பாரதியார் பல்கலைக்கழகத்தை சேர்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட சமூக பணித் துறை மாணவர்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



'மக்களை அச்சுறுத்தி வரும் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் போன்ற நோய்கள் தேங்கி நிற்கும் தண்ணீர், அகற்றப்படாத குப்பைகள் போன்ற சுகதாரமற்ற சுற்றுச்சூழல் காரணமாகத் தான் உருவாகிறது. எனவே இதைப்பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். மாநகராட்சி நிர்வாகிகளோடு இணைந்து இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளோம்' என்றார் மாணவி மதுபாலா.



இந்த பிரச்சாரத்தில் டெங்கு விழிப்புணர்வு பற்றிய வீதி நாடகம் நடத்தப்பட்டு, பொதுமக்களிடம் துண்டறிக்கைகள் விநியோகிக்கப் பட்டது. பின் ரத்தினபுரி முதல் பவர் ஹவுஸ் வரை மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.



இந்த நிகழ்சியில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகராட்சியின் நகர் நல அலுவலர் சந்தோஷ் குமார் பங்கேற்றார்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...