காட்டு யானை முன்பு நின்று செல்பி எடுத்த வாலிபர்களுக்கு அபராதம்

கோவை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் நடமாடிக் கொண்டிருந்த காட்டு யானையின் முன்பு நின்று செல்பி எடுத்த வாலிபர்களுக்கு தமிழக வனத்துறையினர் அபாரதம் விதித்தனர். 

தமிழக வனத்துறையின் கீழ் உள்ள கோவை வனச்சரகத்தில் யானை, மான் உள்ளிட்ட காட்டு விலங்குகள் அதிகம் உள்ளன. அவைகள் அவ்வப்போது, குடியிருப்புப் பகுதிகளுக்கோ அல்லது சாலைகளுக்கோ வந்து செல்லும். அப்போது, தற்போதைய இளைஞர்கள் செல்பி எடுப்பதற்காக, வனவிலங்குகளை தொந்தரவு செய்து வருவது வாடிக்கையாகி வந்தது. 



இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தமிழக வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். 

இந்த நிலையில், கோவை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் நடமாடிக் கொண்டிருந்த காட்டு யானையின் முன்பு நின்று வாலிபர்கள் செல்பி எடுப்பது வனத்துறையினருக்கு தெரிய வந்தது. உடனடியாக அங்கு சென்ற அதிகாரிகள், கார்த்திக், ரஞ்சித்குமார், பிரகாஷ்குமார் ஆகியோரை பிடித்து, கடுமையான எச்சரிக்கை விடுத்துடன், தலா ரூ.5,000 அபராதம் விதித்தனர். 

இதனிடையே, புகைப்படம், செல்பி எடுப்பது உள்ளிட்ட மோசமான நடவடிக்கைகளால் வனவிலங்குகளுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில், யாரேனும் நடந்து கொண்டாலோ, அல்லது அவசர உதவிக்கோ 180042545456 என்ற இலவச எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.  

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...