காட்டு யானை முன்பு நின்று செல்பி எடுத்த வாலிபர்களுக்கு அபராதம்

கோவை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் நடமாடிக் கொண்டிருந்த காட்டு யானையின் முன்பு நின்று செல்பி எடுத்த வாலிபர்களுக்கு தமிழக வனத்துறையினர் அபாரதம் விதித்தனர். 

தமிழக வனத்துறையின் கீழ் உள்ள கோவை வனச்சரகத்தில் யானை, மான் உள்ளிட்ட காட்டு விலங்குகள் அதிகம் உள்ளன. அவைகள் அவ்வப்போது, குடியிருப்புப் பகுதிகளுக்கோ அல்லது சாலைகளுக்கோ வந்து செல்லும். அப்போது, தற்போதைய இளைஞர்கள் செல்பி எடுப்பதற்காக, வனவிலங்குகளை தொந்தரவு செய்து வருவது வாடிக்கையாகி வந்தது. 



இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தமிழக வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். 

இந்த நிலையில், கோவை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் நடமாடிக் கொண்டிருந்த காட்டு யானையின் முன்பு நின்று வாலிபர்கள் செல்பி எடுப்பது வனத்துறையினருக்கு தெரிய வந்தது. உடனடியாக அங்கு சென்ற அதிகாரிகள், கார்த்திக், ரஞ்சித்குமார், பிரகாஷ்குமார் ஆகியோரை பிடித்து, கடுமையான எச்சரிக்கை விடுத்துடன், தலா ரூ.5,000 அபராதம் விதித்தனர். 

இதனிடையே, புகைப்படம், செல்பி எடுப்பது உள்ளிட்ட மோசமான நடவடிக்கைகளால் வனவிலங்குகளுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில், யாரேனும் நடந்து கொண்டாலோ, அல்லது அவசர உதவிக்கோ 180042545456 என்ற இலவச எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.  

Newsletter

Teachers’ Day Celebration at Bharathiar University Highlights Role of Technology and Ethics

The evolving role of educators and the importance of ethics, research integrity and social responsibility in higher educ...

ரத்தினபுரியில் வீட்டின் முன் விளையாடிய குழந்தை நிலத்தடி தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழப்பு

கோவை ரத்தினபுரி வ.உ.சி. நகரில் ஒரு வயது ஆண் குழந்தை வீட்டின் முன்பு விளையாடும்போது சரியாக மூடப்படாத நிலத்தடி தண்ணீர் தொட...

Toddler Dies After Accidental Fall into Water Sump in Coimbatore

Dhanvanth, a one-year-old child, died after he allegedly fell into an underground water sump near his house in Rathinapu...

Man Severely Beaten by Public Over Alleged Chain-Snatching Attempt Near Pappampatti

A video showing members of the public assaulting a man allegedly caught after attempting to snatch a gold chain from a w...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 புதிய மாணவர் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டுக்கான முதலாமாண்டு B.E/B.Tech மாணவர்களுக்கான YUVA 2026 வரவேற்பு ந...

Special Weekly Trains Announced Between Sambalpur and Podanur

To cater to the increasing travel demand, Southern Railway will operate weekly special trains between Sambalpur in Odish...