சலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு மையத்திற்கு ஆராய்ச்சியாளர்கள் தேவை

மும்பையைச் சேர்ந்த பிரபல பறவையியல் ஆராய்ச்சியாளர் சலீம் அலி புகழைப் போற்றும் வகையில் கடந்த 1990 ஆம் ஆண்டு சலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு மையம் கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த பறவையியல் ஆராய்ச்சி மையமானது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. 

நாடு முழுவதும் இருந்து பல்வேறு திட்டப் பணிகள் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, எஸ்.ஏ.சி.ஓ.என் இணையதளத்தில், பறவையியல் தொடர்பாக 10 திட்டப் பணிகள், பல்வேறு அம்சங்களில் இடம்பெற்றுள்ளன. 

இந்த நிலையில், சலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு மையத்தில், 32 ஜீனியர் உயிரியல் ஆராய்ச்சியாளர்கள், 4 சீனியர் உயிரியல் ஆராய்ச்சியாளர்கள், 2 திட்ட விஞ்ஞானிகள், ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட கால்நடை மருத்துவர், இணை ஆராய்ச்சியாளர், உதவி தொழிற்நுட்பாளர், கணினி அல்லது ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் போன்ற பணியிடங்கள் காலியாக உள்ளன. 

சலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு மையத்தின் http://www.sacon.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, நவம்பர் 10-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

பறவையியல் தொடர்பான பட்டப்படிப்புகளை படித்தவர்கள் தகுதியானவர்கள். தேர்வு செய்யப்படுபவர்கள் நவம்பர் கடைசி வாரத்தில் ஆனைக்கட்டியில் உள்ள சலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு மையத்தில் நடக்கும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...