கந்துவட்டி தொடர்பாக காவல் நிலயங்களில் புகார் பெற மறுத்தால் டி.எஸ்.பி.க்களிடம் புகார் அளிக்கலாம் - கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கோவை மாவட்ட எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் கந்து வட்டி தொடர்பான புகார்களை ஏற்க மறுத்தால் அந்தந்த காவல் எல்லைகளுக்கு  உட்பட்ட மாவட்ட துணை கண்காணிப்பாளர்களிடம் புகார் அளிக்கலாம் என்று  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர்.Pa.மூர்த்தி தெரிவித்துள்ளார். 

கந்துவட்டி கொடுமை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் நெல்லை மாவட்ட ஆட்சியர் முன்பு  தீக்குளித்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இச்சம்பவத்தை தொடர்ந்து, கந்து வட்டி தொடர்பாக புகார்கள் வந்தால் உடனடியாக கடும் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவிட்டார். 

இதுதொடர்பாக, டாக்டர்.Pa.மூர்த்தி சிம்ப்ளி-சிட்டிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது :- 

நம் நாட்டில் கந்துவட்டி பிரச்சனை என்பது கடந்த 1500 ஆண்டுகளுக்கு   முன்பு இருந்தே வழக்கத்தில் இருந்து வந்துள்ளது. இதனால் பல குடும்பங்கள்  கொடுமைகளை அனுபவித்த கதைகளை  வரலாறு நமக்கு தெரியப்படுத்துகிறது. இன்னும் இந்தநிலை தொடர்ந்து கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது.  

கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்படும் மக்கள் தைரியமாக அருகில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளிக்கலாம். இது தொடர்பாக புகார்கள் ஏதேனும் வந்தால் உடனடியாக புகார்களை பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து காவல்  நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

சட்ட விதிமுறைகள் காரணமாக காவல் நிலையங்களில் கந்து வட்டி தொடர்பான புகார்களை ஏற்க மறுத்தால் உடனடியாக மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர்களிடம் புகார் அளிக்கலாம்.  

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை காவல் எல்லைகள் 5 சரகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.பேரூர்,பெரியநாயக்கன்பாளையம், கருமத்தம்பட்டி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி என்று பிரிக்கப்பட்டுள்ள இந்த சரகங்களுக்கு தனித்தனியே துணை மாவட்ட காவல் கண்காளிப்பாளராகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் பொதுமக்கள் நேரடியாக புகார் அளிக்கலாம். அல்லது என்னிடம் புகார் தெரிவிக்கலாம். 

கந்துவட்டி தொடர்பாக  வரும் புகார்களின் பேரில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

இவ்வாறு அவர் கூறினார். 

கோவை மாவட்ட  காவல் கண்காணிப்பாளர்  அலுவலக தொலைபேசி எண் : 0422-2300600

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...