தண்டவாளப் பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை - சேலம் இடையிலான ரயில் போக்குவரத்து நேரம் மாற்றம்

ரயில் தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை - சேலம் மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவை மாவட்டம் இருகூர் பகுதியில் உள்ள தண்டவாளங்கள் மற்றும் சிக்னல்களில் மேற்கொள்ளப்பட இருக்கும் பராமரிப்பு பணிகள் காரணமாக. அக்டோபர் 30-ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரை கோவை - சேலம் இடையிலான ரயில் போக்குவரத்து நேரம் மாற்றியமைக்கப்பட்டது. இதையறிந்து பயணிகள் அதற்கேற்றவாறு, பயணத்திட்டங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மாற்றியமைக்கப்பட்ட ரயில்களின் விபரம் பின்வருமாறு :- (அக்டோபர் 30-ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரை)

ரயில் எண் : 13352, அலப்பி தன்பாத் / டாடா எக்ஸ்பிரஸ் 70 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. 

ரயில் எண் : 12678, எர்ணாகுளம் பெங்களூரூ எக்ஸ்பிரஸ் 40 நிமிடங்கள் கோவையில் இருந்து தாமதமாக இயக்கப்படுகிறது. 

ரயில் எண் : 16859, சென்னை எக்மோர் மங்களூரூ எக்ஸ்பிரஸ் 20 நிமிடங்கள் இருகூரில் இருந்து தாமதமாக இயக்கப்படுகிறது. 

ரயில் எண் : 13351, தன்பாத் /  டாடா - அலப்பி எக்ஸ்பிரஸ் 20 நிமிடங்கள் இருகூரில் இருந்து தாமதமாக இயக்கப்படுகிறது. 

ரயில் எண் : 12677, பெங்களூரூ எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் 20 நிமிடங்கள் இருகூரில் இருந்து தாமதமாக இயக்கப்படுகிறது. 

ரயில் எண் : 12675, சென்னை சென்ட்ரல் கோயம்புத்தூர் கோவை எக்ஸ்பிரஸ் 55 நிமிடங்கள் ஈரோட்டில் இருந்து தாமதமாக இயக்கப்படுகிறது.

ரயில் எண் : 12676, கோயம்புத்தூர் சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ் 55 நிமிடங்கள் ஈரோட்டில் இருந்து தாமதமாக இயக்கப்படுகிறது.    

   

ரயில் எண் : 12243, சென்னை சென்ட்ரல் கோயம்புத்தூர் சதப்தி எக்ஸ்பிரஸ் 40 நிமிடங்கள் சேலத்தில் இருந்து தாமதமாக இயக்கப்படுகிறது.    

   

இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...