இந்தியாவிலுள்ள நிறுவனங்களில் உற்பத்தி அதிகரிப்பு காரணமாக ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது


ஜப்பானை சேர்ந்த யஸ்காவா ரோபாட்டிக் நிறுவனம் மற்றும் கோவை தலைமையிடமாக கொண்ட ஆக்சிஸ் குளோபல் ஆட்டோமேசன் நிறுவனம் சார்பில் தொழித்துறை ரோபாட்டிக் மாநாடு கோவை சிங்காநல்லூர் பகுதயில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.



இது குறித்து யஸ்காவா இந்தியாவின் இயக்குனர் மற்றும் முதன்மை அலுவலர் யாசுநோரி மட்சுமோட்டோ கூறும்போது தற்போது உலகளவில் ரோபோக்களின் (robots) பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும் இந்தியாவில் புதிய நிறுவனங்கள் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வருவதால் ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

தற்போது இந்தியாவில் வருடத்திற்கு 800க்கும் மேற்பட்ட ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்து கொண்டு வருவதாக தெரிவித்த அவர் இதன் மூலம் உற்பத்தி பெருக்க தரமான பொருட்கள் தயாரித்தல் உலக நாடுகளுடன் போட்டியிடக்கூடிய தேவைகள் மற்றும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாவதாக தெரிவித்தார். 

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு தேவைகேற்ப 5 லட்சம் முதல் 100 கோடி ருபாய் வரையிலான தொழில்நுட்ப ரோபோக்களின் பயன்பாட்டில் உள்ளதாக தெரிவித்தார்.



ஆக்சிஸ் குளோபல் ஆட்டோமேசன் இயக்குனர் மற்றும் நிறுவனர் சதிஸ் செல்லத்துரை கூறும்போது ஒரு அடிப்படை தேவைக்கான ரோபோவை உருவாக்குவதற்கு 20 நாட்கள் ஆகும் என தெரிவித்த அவர் அதிக திறன் வாய்ந்த ரோபோக்களை உருவாக்க 3 மாதம் தேவைப்படும் என தெரிவித்தார்.

 அவர் மக்களிடையே தொழிற்துறையில் ரோபாட்டிக் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதாக தெரிவித்தார். மேலும் தற்போது தொழிற்சாலைகளில் 80முதல் 800வரை ரோபாட்டிக் இயந்திரங்கள் ஆர்க் வெல்டிங், பெயிண்டிங், ஸ்பாட் வெல்டிங் மற்றும் பொருட்களை கையாள்வதற்கு உபயோகபட்டுவருவதாகவும் தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில் கோவையை சேர்ந்த 200க்கும்மேற்பட்ட தொழிற்துறையினர் மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...

FL2 Bar on Peelamedu-Vilankurichi Road Sealed Following Altercation Complaint

An FL2 liquor bar on Peelamedu-Vilankurichi Road in Coimbatore was sealed on September 8 following a police case over a...

விதிமீறல்: பீளமேடு மதுபானக் கூடத்திற்கு சீல் வைப்பு

கோவை பீளமேடு FL.2 மதுபானக் கூடத்தில் மோதல் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, உறுப்பினர் அல்லாதோருக்கு மது விற்பனை செய்ததாலும்...