இந்தியாவிலுள்ள நிறுவனங்களில் உற்பத்தி அதிகரிப்பு காரணமாக ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது


ஜப்பானை சேர்ந்த யஸ்காவா ரோபாட்டிக் நிறுவனம் மற்றும் கோவை தலைமையிடமாக கொண்ட ஆக்சிஸ் குளோபல் ஆட்டோமேசன் நிறுவனம் சார்பில் தொழித்துறை ரோபாட்டிக் மாநாடு கோவை சிங்காநல்லூர் பகுதயில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.



இது குறித்து யஸ்காவா இந்தியாவின் இயக்குனர் மற்றும் முதன்மை அலுவலர் யாசுநோரி மட்சுமோட்டோ கூறும்போது தற்போது உலகளவில் ரோபோக்களின் (robots) பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும் இந்தியாவில் புதிய நிறுவனங்கள் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வருவதால் ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

தற்போது இந்தியாவில் வருடத்திற்கு 800க்கும் மேற்பட்ட ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்து கொண்டு வருவதாக தெரிவித்த அவர் இதன் மூலம் உற்பத்தி பெருக்க தரமான பொருட்கள் தயாரித்தல் உலக நாடுகளுடன் போட்டியிடக்கூடிய தேவைகள் மற்றும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாவதாக தெரிவித்தார். 

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு தேவைகேற்ப 5 லட்சம் முதல் 100 கோடி ருபாய் வரையிலான தொழில்நுட்ப ரோபோக்களின் பயன்பாட்டில் உள்ளதாக தெரிவித்தார்.



ஆக்சிஸ் குளோபல் ஆட்டோமேசன் இயக்குனர் மற்றும் நிறுவனர் சதிஸ் செல்லத்துரை கூறும்போது ஒரு அடிப்படை தேவைக்கான ரோபோவை உருவாக்குவதற்கு 20 நாட்கள் ஆகும் என தெரிவித்த அவர் அதிக திறன் வாய்ந்த ரோபோக்களை உருவாக்க 3 மாதம் தேவைப்படும் என தெரிவித்தார்.

 அவர் மக்களிடையே தொழிற்துறையில் ரோபாட்டிக் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதாக தெரிவித்தார். மேலும் தற்போது தொழிற்சாலைகளில் 80முதல் 800வரை ரோபாட்டிக் இயந்திரங்கள் ஆர்க் வெல்டிங், பெயிண்டிங், ஸ்பாட் வெல்டிங் மற்றும் பொருட்களை கையாள்வதற்கு உபயோகபட்டுவருவதாகவும் தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில் கோவையை சேர்ந்த 200க்கும்மேற்பட்ட தொழிற்துறையினர் மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...