மெர்சல் பட பாணியில் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை தனியார் மருத்துவமனைக்கு மாற்றும் தரகர் சிக்கினார்


கோவை, அக்டோபர். 28: கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை ஆதாய நோக்கில் தனியார் மருத்துவமனைக்கு மாற்ற முயன்ற இடைத்தரகரை போலீசார் கைது செய்தனர். 

பொள்ளாச்சி பகுதிய சேர்ந்தவர் வேலுச்சாமி. அவரது மகன் சந்திரசேகர்(40).. விபத்து ஒன்றில் சிக்கிய இவர் நேற்று காலை 11 மணியளவில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று மாலை அரசு மருத்துவமனை வளாகத்திற்கு பொள்ளாச்சியை சேர்ந்த ஜான் என்ற முருகன் (47) என்பவர் வந்தார். மேலும் சந்திரசேகரிடம், வழக்கு நடத்தி காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் பணம் பெற்று தருவதாகவும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம் என்றும் வலியுறுத்தியதாக தெரிகிறது. ஆனால், இதை சந்திரசேகர் மறுத்ததோடு, அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்றுக்கொள்வதாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக, அங்கு பணியில் இருந்த ரமேஷ்ராஜா என்ற மருத்துவருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அவர் ஜான்-ஐ அணுகி, 'எதற்காக அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற முயற்சி செய்கிறீர்கள்?' என்று கேட்டுள்ளார். அதற்கு, தனக்கு பின்னால் பெரிய அதிகாரிகள் இருப்பதாகவும், பகைத்துக்கொள்ள வேண்டாம் என்றும் மருத்துவரை ஜான் மிரட்டியுள்ளார். தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகத்தின் மூலம் ரமேஷ்ராஜா பந்தயசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜான்-ஐ கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த வழக்கில், வழக்கறிஞர்கள், மற்றும் காவல்துறையில் பணியாற்றும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால், கைது செய்யப்பட்டவரிடம் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர் போலீசார். 

சமீபத்தில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் பணத்திற்காக அரசு மருத்துவமனை செல்லும் நோயாளிகளை தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் தரகர்கள் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதற்கு தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதே பாணியில் சம்பவம் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...