ஆர்த்தோ ஒன் சார்பில் ரயில்வே ஊழியர்களுக்கு இலவச மருத்துவ முகாம்

கோவை, அக்டோபர் 28: கோவையில் செயல்பட்டு வரும் ஆர்த்தோ ஒன் மருத்துவமனையின் சார்பில் ரயில்வே ஊழியர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.



போத்தனூர் சிக்னல் மற்றும் தொலைத் தொடர்புத்துறை பணிமனை அருகே நடந்த இந்த முகாமில், ஏராளமான ரயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டு, தங்களை பரிசோதனை செய்து கொண்டனர். மருத்துவர்கள், சத்யா விக்னேஷ், சிவக்குமார், கணேஷ் தலைமையிலான மருத்துவக்குழுவினர் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். 

இந்த மருத்துவ முகாம் குறித்து ஆர்த்தோ - ஒன் நிறுவனர் டேவிட் வி ராஜன் கூறுகையில், பொதுவாகவே, ரயில்வேத்துறையில் பணிபுரிபவர்கள் உடலை உழைப்பால் கொடுக்கும் பணியை நாள்தோறும் செய்வர். இதனால், அவர்களுக்கு, தோள்பட்டை, முதுகு, கை, கால்கள் இணைப்பு மற்றும் தசை பிடிப்பு போன்ற எலும்பு தொடர்பான பிரச்சனைகள் கண்டிப்பாக வர அதிக வாய்ப்புகள் உள்ளது. இதேபோல, மற்ற துறை பணியாளர்களுக்கும், அவரவர் வேலைக்கேற்றவாறு எலும்பு பிரச்சனைகள் வரும். எனவே, பணி செய்யும் இடங்களில் நல்ல உடல்நிலையுடன் வேலை செய்யும் நோக்கில் இது போன்ற முகாம்கள் நடத்தப்படுகின்றன. 



ஆர்த்தோ - ஒன் எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவமனையானது, பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்களை மேற்கொண்டு, எலும்பு முறிவு சிகிச்சை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.



பிரபல தனியார் பிரபல செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் ஆர்த்தோ - ஒன் மருத்துவமனையானது, தென்னிந்தியாவில் உள்ள சிறந்த 10 மருத்துவமனைகளில் ஒன்றாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...