தூய்மையான பசுமையான தீபாவளியை கொண்டாடியவர்களுக்கு மாநகராட்சி சார்பில் பரிசுகள் வழங்கி கவுரவிப்பு


கோவை, அக்டோபர் 28: சுற்றுசூழல் மாசுபடாத வகையில் பசுமை தீபாவளி கொண்டாடியவர்களுக்கு கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மருத்துவர்.க.விஜயகார்த்திகேயன் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார். 

கோவை மாநகராட்சி சார்பாக சுற்றுசூழல் மாசுபடாமல் பசுமையான தீபாவளி கொண்டாட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் ‘பசுமை தீபாவளி’ கொண்டாடும் நபர்களுக்கு பாராட்டி பரிசளிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் அறிவித்திருந்தார். அதன்படி பசுமை தீபாவளியை கொண்டாடிய பொதுமக்கள், மாணவர்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களிடமிருந்து 140 பரிந்துரைகள் வாட்ஸ் ஆப் மூலம் பெறப்பட்டன. 

இவர்களில், சிலர் சுற்றுசூழல் மாசுபடாத வகையில் ஏழைகள் மற்றும் பழங்குடி மக்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடிக்காமல் பசுமை தீபாவளி கொண்டாடுவது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பியிருந்தனர். பசுமை தீபாவளி கொண்டாட்டங்கள் சம்பந்தமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் ஆராயப்பட்டு இறுதியாக 14 தனிநபர்கள், 6 தன்னார்வ நிறுவனங்கள், 9 தனியார் நிறுவனங்கள், 4 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 1 குடியிருப்பு சங்க நிர்வாகிகள், ஆகமொத்தம் 34 பரிந்துரைகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் அனைவருக்கும் ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன் பாராட்டு தெரிவித்து, பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார். 

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...