பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்க மு.க.ஸ்டாலின் கோவை வருகை

பேரறிஞர் அண்ணாவின் 109வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற போட்டியில்  வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்க திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை வந்தார்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் திமுக இளைஞரணி அறக்கட்டளை சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 109 வது பிறந்த நாள்விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் இன்று நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டிகள் நாளை (அக்டோபர் 29) நடைபெறவுள்ளது.

இதில் வெற்றி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்ற உள்ளார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இன்று கோவை விமானநிலையம் வந்த மு.க.ஸ்டாலினுக்கு திமுக-வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, திருச்சி சாலை, ஒலம்பஸ் அடுத்த ருக்மணி நகரில், மறைந்த தொழில் அதிபர் பொள்ளாச்சி மகாலிங்கத்தின் மனைவி மாரியம்மாள் மறைவிற்கு, அவரது வீட்டிற்கு சென்று மகாலிங்கம் மகன் மாணிக்கம், மருமகன் கிருஷ்ணராஜ் வானவராயர் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோரிடத்தில் துக்கம் விசாரித்த மு.க.ஸ்டாலின், மாரியம்மாள் திருவுருவ படத்திற்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதனைத்தொடர்ந்து, சாலை மார்க்கமாக அவர் மேட்டுப்பாளையம் சென்றார்.



இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் தேவர் குருபூஜையில் பங்கேற்பதற்காக கமுதி, பசும்பொன்னிற்கு செல்கின்றார்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...