மாயமான வருமான வரித்துறை அதிகாரியை தேடி கோவா சென்றது தனிப்படை

கோவை, அக்டோபர். 29: கோவையை சேர்ந்தவர் செண்பகராமன். ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி. இவரது மகன் சிவக்குமார்(38) கோவை வருமான வரித்துறை, தலைமையிட துணை ஆணையராக பணியாற்றி வருகிறார். கடந்த 2008-ம் ஆண்டு, ஐ.ஆர்.எஸ். தேர்ச்சி பெற்றவர்.

இவரது மனைவி ஸ்ரீதேவி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

இந்த நிலையில் கடந்த 13-ம் தேதி சிவக்குமார் திடீரென மாயமானார். 

குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், பீளமேடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், 13-ம் தேதி அதிகாலை, 1.00 மணியளவில், சிவக்குமார் வீட்டில் இருந்து ஒரு சூட்கேசுடன் வெளியேறியது, அவர் குடியிருப்பில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.

அவரது மொபைல் போன், ஏ.டி.எம்., கார்டு உள்ளிட்ட அனைத்தையும் வீட்டில் வைத்து சென்றுள்ளார்.

குடும்ப பிரச்னை காரணமாக, சிவக்குமார் வீட்டை விட்டு சென்றிருக்கலாம் என, கூறப்பட்ட நிலையில் சிவக்குமாரை தேடி தனிப்படை போலீசார் கோவா சென்றுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...