கேஎம்சிஎச் சார்பில் -நுரையீரல் அறுவை சிகிச்சை கருத்தரங்கு

கோவை, அக்டோபர் 29: கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையை (கேஎம்சிஎச்) சேர்ந்த நுரையீரலியல் துறை நுரையீரல் நோய்களை குணப்படுத்துவதில் மட்டுமின்றி நுரையீரல் நோய் சிகிச்சைகளில் புதுமைகளை செய்வதிலும் தீவிரம் காண்பித்து வருகிறது.

ஏற்கனவே இந்த துறையில் பெற்றிருக்கும் அறிவை மேம்படுத்துவதற்காக கற்பித்தல் நிகழ்ச்சிகளை மருத்துவர்களுக்கு நடத்தியுள்ளது.

"TAPING 2017" என்பதும் அதுபோன்ற ஒரு முயற்சிதான். இந்த ஒரு நாள் நிகழ்ச்சி இன்று (அக்டோபர் 29) நடைபெற்றது. இதில், நுரையீரல் அறுவை சிகிச்சை மற்றும் பல்வேறு செயல்முறைகள் பற்றி கற்பிக்கப்பட்டன. நுரையீரல் மருத்துவர்களும் மற்றும் இந்த துறையில் முதுநிலை கல்வி பயின்றோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்தப் பயிலரங்கில் விலங்குகளின் திசுக்களை பயன்படுத்தி அவர்களுக்கு நேரடி பயிற்சி அளிக்கப்பட்டது.



தோராக்கோஸ்கோபி என்பது உட்புற பரிசோதனை, பயாப்ஸி, மற்றும் பற்சிகர வளைவு மற்றும் தோராசிக் குழிக்குள்ளான நோய்களின் மருத்துவ செயல்முறை ஆகும். இதன் பரிசோதனை முறையானது, நுரையீரல் அறுவை சிகிச்சைக்கு மிகவும் பயன்படக் கூடிய மற்றும் பாதுகாப்பான சிகிச்சை முறை என்று மருத்துவர் எஸ். சாந்த குமார் மற்றும் மருத்துவர் ஜே.வேணுகோபால் தெரிவித்தனர்.

கருத்தரங்கில் உரையாற்றிய கேஎம்சிஎச் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் நல்ல ஜி. பழனிசாமி கூறியதாவது:- நுரையீரல் சிகிச்சை துறையில் தொடர்ந்து புதுமைகளை புகுத்துவதில் கேஎம்சிஎச் மருத்துவமனை பெருமைகொள்கிறது. நுரையீரல் இயல்துறையில் மருத்துவ அறிவை பகிர்ந்துகொள்ள இந்த கருத்தரங்கு பெரும்பங்காற்றியுள்ளது என்றார்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...