டெங்குவின் புகலிடமாகும் கலிக்கநாயக்கன்பாளைய கழிவுநீர் சாக்கடைகள்

கோவை, அக்டோபர் 29: டெங்கு மற்றும் அதன் விளைவுகள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கோவை புறநகர் பகுதியான கலிக்கநாயக்கன்பாளையம் கிராமத்தில் சுகாதார சீர்கேட்டினால் இந்த நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது வேதனையளிப்பதாக அமைந்துள்ளது.



குப்பைத் தொட்டிகள் மற்றும் அசுத்தங்கள் நிறைந்த கழிவுநீர் சாக்கடைகள் போதிய பராமரிப்பின்றி திறந்த நிலையில் விடப்பட்டதே இதற்கு முக்கிய காரணம் என்கின்றனர் அப்பகுதி குடியிருப்பு வாசிகள். இதன் விளைவாக இக்கிராமத்தில் ஒன்பது வயது பெண் குழந்தைக்கு டெங்கு அறிகுறிகள் ஏற்பட்டு தற்போது கோவை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.



கலிக்கநாயக்கன்பாளையம், 6-வது வார்டு அண்ணா நகர் பகுதியில் உள்ள எஸ்.ஜோதிமணி (60) எனும் தனது தாத்தா வீட்டிற்கு மதுக்கரையில் இருந்து ஜே. சவுதிகா (6) வந்துள்ளார். அங்கு வசித்து வந்த அவருக்கு சில நாட்களில் காய்ச்சல் ஏற்படவே தொண்டாமுத்தூர் பகுதியில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றுள்ளார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சவுதிகாவிற்கு டெங்கு அறிகுறிகள் உள்ளன என்று தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, கோவை அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சவுதிகாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது சிகிச்சைக்குப் பின் சிறுமியின் உடல் நிலை முன்னேற்றம் அடைந்திருந்தாலும் அக்கிராமத்தில் இது முதல் டெங்கு பாதிப்பு என்பதால் உள்ளூர் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து, கலிக்கநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த கே.எம்.பரதன் கூறுகையில், 'இப்பகுதியில் உள்ள சாக்கடைக் கால்வாய்களை முறையாக மூடி வைக்க அதிகாரிகள் தவறிவிட்டனர். மேலும், குப்பைத் தொட்டிகள் அமைக்கப்படாததால் பெரும்பாலான பிளாஸ்டிக் கழிவுகள் சாக்கடையிலேயே வீசப்படுகின்றன. இவை மொத்தமுமாக அடைக்கப்பட்டு மிகப்பெரிய அளவில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. துப்புரவுப் பணியாளர்களும் உரிய நேரத்தில் இதனை சுத்தம் செய்வதில்லை. நகர் முழுவதும் டெங்கு உள்ளிட்ட உயிர்கொல்லி நோய்கள் பரவிவரும் சூழ்நிலையில் இங்கு அதிகளவிலாக டெங்கு கொசுகள் உருவாகி தற்போது ஒரு சிறுமி பாதிக்கப்பட்டுள்ளார்' என்றார்.



இதுகுறித்து கருத்துகேட்கும் வகையில் மாவட்ட நிர்வாக அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவர்கள் தொடர்ந்து அழைப்பை புறக்கணித்தனர்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...