மனித கழிவுகளை ஓடையில் கலக்கவிட்ட குன்னூர் அரசு மருத்துவமனையினைக் கண்டித்து பொதுமக்கள் முற்றுகை

மனிதக் கழிவுகளை பம்பு செட் மூலம் ஓடையில் கலக்கவிட்ட குன்னூர் அரசு மருத்துவமனையினை பொதுமக்கள் முற்றுகையிட்டதைத் தொடர்ந்து இனிவரும் காலங்களில் கழிவுகளை லாரிகள் மூலம் அகற்றுவதாக மருத்துவர் உறுதியளித்தார்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் நகரப்பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனை நிர்வாகம், செப்டிக் டேங்கில் உள்ள மனித கழிவுகளை பம்பு செட் மூலம் குன்னூர் கிருஷ்ணாபுரம் உமரிகாட்டேஜ் குடியிருப்பு பகுதிகள் மற்றும் மார்க்கெட் வழியாக இரவு நேரத்தில் ஓடையில் கலக்கவிடுவதாக பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் திமுக மாவட்டச் செயலாளர் முபாரக், நகரச் செயலாளர் இராமசாமி ஆகியோர் மருத்துவமனை முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று தலைமை மருத்துவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், முறையாக கழிவுகளை லாரிகள் மூலமாக அகற்றுவதாக மருத்துவர் கூறியதைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்த பம்புசெட்டு அகற்றப்பட்டது. பின், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...