பெட்டி கடை அமைக்க காவல் துறை ஆய்வாளர் பணம் கேட்பதாக பார்வையற்ற இளைஞர் ஆட்சியரிடம் புகார்


அக்டோபர் 30: உக்கடம் பேருந்து நிலையத்தில் பெட்டி கடை அமைக்க காவல் துறை ஆய்வாளர் பணம் கேட்பதாக பாதிக்கப்பட்ட பார்வையற்ற இளைஞர் பத்ரன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்.

கோவை மாவட்டம், உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் பத்ரன். இவருக்கு உக்கடம் பேருந்து நிலையத்தில் பெட்டி கடை வைக்க அனுமதி வழங்கிய மாநகராட்சி நிர்வாகம், மாற்றுத் திறனாளிகள் உதவி தொகையின் கீழ் கடை வைக்க 30 ஆயிரம் ரூபாய் நிதியும் வழங்கியது.

இதனைத்தொடர்ந்து, கடை அமைக்க உக்கடம் காவல் நிலையத்தில் தடையின்மை சான்று கேட்டு தொடந்து பல முறை அவர் மனு அளித்தும் காவல் துறையினர் அனுமதி மறுத்து வருவதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், இன்று பத்ரன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில் உக்கடம் காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் தன்னிடம் தடையின்மை சான்று வழங்க பணம் கேட்டு வருகிறார். மாவட்ட ஆட்சியர் இப்பிரச்சனையில் தலையிட்டு உக்கடம் பேருந்து நிலையத்தில் கடை அமைக்க அனுமதி பெற்றுத்தருவதுடன், சம்மந்தப்பட்ட காவல் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அம்மனுவில் தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...