பணியின் போது மின்சாரம் தாக்கி கைகள் பாதிக்கப்பட்ட இளைஞர் உதவித்தொகை கோரி மனு

கோவை, அக்டோபர் 30-  பணியின் போது மின்சாரம் தாக்கியதால் இரு கைகளும் பாதிக்கப்பட்ட இளைஞர் செந்தில்குமார், இழப்பீட்டுத் தொகையினை பெற்றுத் தரக் கோரி ஆட்சியரிடம் மனு அளித்தார்.



விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் கடந்த 2010-ம் ஆண்டு கோவை நீலாம்பூர் பகுதியைச் சேர்ந்த சேது என்பவரின் வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் இரு கைகளும் செயல் இழந்தன.

இது தொடர்பாக நடைபெற்ற வழக்கில் கைகள் பாதிக்கப்பட்ட அவருக்கு 6 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்திரவிட்டது. இந்த தொகையினை வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் வசூல் செய்து பாதிக்கப்பட்டவருக்கு வழங்க நீதிமன்றம் உத்திரவிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.

தொடர்ந்து, பாதிக்கப்பட்ட அவர் கோவை மாவட்ட வருவாய் அலுவலரிடம் பல முறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் திரு. டி.என்.ஹரிஹரன்-யிடம் தனது இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தரக் கோரி இன்று செந்தில்குமார் மனு அளித்தார். மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...