கோவையில் அதிகரித்து வரும் ”செல்ஃப் டிரைவிங் கார்” கலாச்சாரம் - வாடகை கார் ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவதாக புகார்



கோவை, அக்டோபர் 30 : ”செல்ஃப் டிரைவிங் கார்”  முறை அதிகரித்து வருவதால், வாடகை கார் ஓட்டுநர்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் திரு.டி.என்.ஹரிஹரனிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர், கோவை மாவட்ட ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட புகார் மனுவில் கூறியுள்ளதாவது, கோவை மாவட்டத்தில் தற்போது இயங்கி வரும் கர்நாடக மாநிலத்தின் ”செல்ஃப் டிரைவிங் கார்” பயன்பாடு அதிகரித்துள்ளது . இதனால், வாடகை கார் ஓட்டுநர்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

நடப்பாண்டில் நாடாளுமன்றம்  மோட்டார் வாகனச் சட்டம் 2017 என்ற சட்டத்தை  அமல்படுத்த உள்ளது. இந்த சட்டத்தின் மூலம் ஏற்படும் விளைவுகள் என்னவென்றால், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் ஓட்டுநர் பயிற்சி பள்ளி, வாடகைக்கு வாகனம் ஓட்டும் அலுவலகம், இவை அனைத்தும் ஒரே அலுவலகம் என்றும், கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டும் தொழில் செய்ய வேண்டும் என்ற முறையில் அந்த சட்டத்தை வடிவமைத்து உள்ளார்கள். இதன்மூலம் மோட்டார் தொழில் பாதிப்பு அடையும் அவலம் உருவாகியுள்ளது. 

அதாவது, எஃப்.சி.(FC) வேலைகள் மற்றும் வாகன வேலைகள் அனைத்தும் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே பார்க்க முடியும் என்பதால், பல வாகனங்களை இயக்க முடியாமல் போகும் சூழ்நிலை உருவாக உள்ளது. 

மேலும், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் என்ற முறை பொதுமக்களிடையே இருக்காது. ஒவ்வொரு முறையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இடம் புதிதாக பதிவு செய்து உரிமம் பெற வேண்டும். வேக கட்டுப்பாட்டு கருவையை சுற்றுலா வாகனங்களுக்கு பொருத்துவதை நீக்க வேண்டும். 8-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு மட்டும் பேட்ச் உரிமம் முறையை ரத்து செய்ய வேண்டும். வாகன காப்பீட்டுத் தொகையை குறைக்க வேண்டும்.

அண்டை மாநிலங்களை போல அனைத்து வாகனங்களுக்கும் டி-போர்டு அனுமதி கொடுக்க வேண்டும். கனரக வாகனங்களுக்கு கொடுக்கும் அனைத்து மாநிலங்களுக்கு சென்ற வர உரிமத்தை போல, சுற்றுலா வாகனங்களுக்கும் தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...