தேவர் ஜெயந்தி விழாவுக்கு பாதுகாப்புக்கு சென்ற கோவை உதவி ஆய்வாளர் பலி

கோவை, அக்டோபர் 31: முத்து பழனியப்பன் (54), தேவர் ஜெயந்தி விழாவுக்கு பாதுகாப்புக்கு சென்ற கோவை உதவி ஆய்வாளர், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நேற்று மரணமடைந்தார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் அவரது பிறந்தநாளின் போது ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் குருபூஜை நடத்தப்படுகிறது. அதன்படி, அவரின் பிறந்தநாளான நேற்று தமிழக அரசு சார்பில் குருபூஜை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. முதலைமச்சர், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த விழாவுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து போலீசார் பாதுகாப்புக்கு சென்றிருந்தனர். 

கோவை மாவட்டத்தில் இருந்து ஆயுதப்படையில் சிறப்பு துணை ஆய்வாளராக பணியாற்றி வந்த முத்து பழனியப்பன் என்பவரும் பாதுகாப்புக்கு சென்றிருந்தார். . இந்த நிலையில், நேற்று பாதுகாப்பு பணியை முடித்த அவர் பரமக்குடியை அடுத்த முல்லைப்பள்ளி என்ற இடத்தில் ஓய்வெடுக்க சென்றார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார் . தற்போது அவரது உடல் பரமக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 

இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்

காவல்துறையில் பணியாற்றும் போதே முத்து பழனியப்பன் பலியானதால் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு காவல்துறையில் வேலை கிடைக்கும் என்பதும், அவரது இளைய மகன் அகில் சுஜின் கோவையில் மருத்துவப்படிப்பை மேற்கொண்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...