டெங்கு ஒழிப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி துணை ஆணையர் ஆய்வு

கோவை சிட்கோ தொழிற்சாலை வளாகம் மற்றும் கிழக்கு மண்டலம் நேரு நகர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் திரு.டி.என்.ஹரிஹரன் மற்றும் மாநகராட்சி துணை ஆணையர் திருமதி ப.காந்திமதி ஆகியோர் டெங்கு ஒழிப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.



கோவை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளும், பொதுமக்களுக்கு ஏடிஸ் கொசுப்புழு தொடர்பான விழிப்புணர்வு பணிகளும் உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் மூலம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.



அதன்படி, இன்று மதுக்கரை ஊராட்சி ஒன்றியப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு மேற்கொண்டபோது, ஈச்சனாரி சிட்கோ தொழில்நிறுவனங்கள் வளாகத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏடிஸ் கொசுப்புழு உள்ளதை கண்டு அப்புறப்படுத்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், சுகாதாரம் பேணிக்காக்காமல், ஏடிஸ் கொசுப்புழு வளரும் சூழலை கொண்டிருந்த நிறுவனத்திற்கு ரூ.5000 அபராதமும் விதித்தார்.

இதேப்போன்று, மாநகராட்சி துணை ஆணையர் கிழக்கு மண்டலம், 34-வது வார்டுக்குட்பட்ட நேரு நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் டெங்கு தடுப்பு மற்றும் ஒழிப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...