கோவையில் அடுத்தடுத்து ஐந்துக்கும் மேற்பட்ட கடைகளில் திருட்டு: மர்ம நபர்கள் துணிகரம்

கோவை, அக்டோபர்.31: கோவை மாநகர் பகுதியில் அடுத்தடுத்து ஐந்துக்கும் மேற்பட்ட கடைகளுக்குள் புகுந்த மர்ம நபர்கள் ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

வெரைட்டி ஹால் பகுதியை அடுத்த தாமஸ் வீதி பகுதியில் ஏராளமான மொத்த கொள்முதல் விற்பனை நிலையங்கள் உள்ளன. இங்கு, அழகு சாதன பொருட்கள், மளிகை மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யபட்டு வருகின்றன.



இப்பகுதியில், பேன்சி கடை நடத்தி வருபவர் மங்காரவ் (35). பணி முடிந்து நேற்று வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றார். அப்போது, கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் கடையில் இருந்த ரூ.10 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இவரது கடை அருகிலேயே புத்தகக் கடை நடத்தி வருபவர் பிரேம் சிங் (37). இவரது கடையின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் உள்ளே இருந்த ரூ.6 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

மேலும், அடுத்தடுத்து இருந்த 3-க்கும் மேற்பட்ட கடைகளில் மர்ம நபர்கள் கை வரிசையை காட்டியுள்ளனர். கொள்ளைபோன பணம் மற்றும் பொருட்கள் தொடர்பாக வெரைட்டி ஹால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் மாநகரின் முக்கியப் பகுதியில் அடுத்தடுத்த கடைகளில் கொள்ளை போன சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...