ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் நோயாளிகளின் சிகிச்சைக்கு ஈஎம்ஐ திட்டம் அறிமுகம்

கோவை, நவம்பர் 1: கோவையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் நோயாளிகளின் சிகிச்சைக்கான எளிய ஈஎம்ஐ திட்டம் காபிடல் ஃப்லோட் நிறுவனம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



இந்த அறிமுக நிகழ்ச்சியில் முதன்மை இயக்க அதிகாரி திரு.வி.ராமகிருஷ்ணா பேசுகையில், இந்தத் திட்டத்தின் மூலம் நோயாளிகளுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ. 3 லட்சம் வரை பணம் கடனாக வட்டி இல்லாமல் வழங்கப்படும். இது ஒரு லாப நோக்கமற்று செயல்படுத்தப்பட்டுள்ளது. கடன் பெற விண்ணப்பம் ஆய்வு கட்டணங்களோ வேறு செலவுகளோ எதுவும் இல்லை. மருத்துவமனைக்கோ அல்லது கடன்பெறவோ முன்பணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை என்றார்.

இதனைத்தொடர்ந்து, காபிடல் ஃப்லோட் கோவை கிளை மேலாளர் திரு. மணிகண்டன் பேசுகையில், முன்பணம் எதுவும் இல்லாமல் வட்டி இன்றி ஆவண கட்டணமின்றி இந்தத் திட்டத்தினை துவங்கியிருப்பது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள், ஒன்பது மாதங்கள் மற்றும் பன்னிரண்டு மாதங்கள் என்ற எளிதான சுலப தவனை முறையில் இந்தக் கடன் வசதி வழங்கப்படுகிறது.



நோயாளிகளும், ரத்த உறவுகளும் இந்தக் கடனுக்காக அவர்களது ஆதார் அட்டை, பான் அட்டை மற்றும் வங்கி விவரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் மூலம் 70 சதவிகிதம் நோயாளிகள் தங்கள் மருத்துவ செலவுகளை உடனடியாக பெற முடியும். கோவை மக்களின் நலனுக்காக எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் மற்றொரு சமூக சேவை முயற்சியாக இது கருதப்படுகிறது என்றார்.

இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை டீன் மருத்துவர் திரு. பி.சுகுமாரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...