நீலகிரியில் வடகிழக்கு பருவமழை குறித்து முதன்மை பொறுப்பாளர்களுக்கு பேரிடர் பயிற்சி முகாம்

நீலகிரி, நவம்பர் 1: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வெள்ள நிவாரண மையத்தில் வடகிழக்கு பருவமழை குறித்து முதன்மை பொறுப்பாளர்களுக்கான பேரிடர் பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், ஆட்சியர் பேசியதாவது:- நீலகிரி மாவட்டத்திற்கு தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் வரை மற்றும் வடகிழக்கு பருவழை அக்டோபர் முதல் டிசம்பர் வரை கிடைக்கப் பெறுகிறது. நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 229 பகுதிகள் அபாயகரமான பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ளது. எனவே அந்தப் பகுதிகளில் ஒரு குழுவிற்கு 10 பேர் வீதம் தன்னார்வலர் குழுக்கள் அமைக்கப்பட்டு தயாராக உள்ளது.



இந்த 229 இடங்களில் அபாயகரமான பகுதிகள் குன்னூர் மற்றும் கோத்தகிரியில் தான் அதிகமாக உள்ளது. சத்ய சாய் பேரிடர் மீட்பு குழுவானது எல்லா மாவட்டங்களிலும் பயிற்சி அளித்து வருகின்றனர். இந்த நிறுவனம் இந்த வாரம் முழுக்க நீலகிரி மாவட்டத்தில் பணியாற்ற உள்ளனர்.

மழை வெள்ளம் மற்றும் நிலநடுக்கம் போன்ற பேரிடர் காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க பள்ளிகள் மற்றும் சமுதாய கூடங்கள் என 466 இடங்கள் அடையாளம் கண்டறியப்பட்டு தயார் நிலையில் உள்ளது. பேரிடர் காலங்களில் அவசர கால உதவிக்காக 1077 என்ற எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.

பேரிடர் காலங்களில் அனைத்து அதிகாரிகளும் மிக பொறுப்போடு செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

பின்னர் பேரிடர் காலங்களில் வெள்ளம் மற்றும் நிலச் சரிவினால் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்த ஒத்திகையை அவர் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து கோத்தகிரி அரசு உயர்நிலைப் பள்ளியின் சத்துணவு கூடத்தினையும், பொருட்களின் இருப்பினையும் ஆய்வு செய்தார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...