வேளாண் பல்கலை சார்பில் தயார்நிலை உணவுகள் தயாரிக்கும் சிறப்பு வகுப்பு

கோவை, நவம்பர் 2 : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் சார்பில் தயார்நிலை உணவுகள் தயாரிக்கும் சிறப்பு வகுப்பு வரும் 7-ம் தேதி நடைபெற இருக்கிறது. 

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், உணவு பதப்படுத்துதல் மையம் மற்றும் பயிற்சிக் கூடம் சார்பில், கிணத்துக்கடவு, கோதவாடிப் பிரிவில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், கோவை விற்பனைக்குழுவில் வரும் 07-ம் தேதி இந்த வகுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கீழ்க்கண்ட தலைப்புகளில் பயிற்சி வழங்கப்படும் : 

 ஹெல்த் மிக்ஸ்

 பக்கோடா மிக்ஸ் 

 அடை மிக்ஸ்

 சூப் மிக்ஸ் 

 சூப் பொடி

 புளியோதரை பேஸ்ட் 

 வத்த குழம்பு பேஸ்ட்

 உலர வைத்த பொருட்கள் 

ஆர்வமுள்ளவர்கள் ரூ.750 மட்டும் பயிற்சி நாளன்று செலுத்த வேண்டும். 

மேலும், விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 

பேராசிரியர் மற்றும் தலைவர், 

அறுவடைபின் சார் தொழில் நுட்பத் துறை, 

வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், 

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை - 641003. 

தொலைப்பேசி எண் : 0422 - 6611268 , 6611340. 94425 99125

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...