ரேசன் கடை சர்க்கரை விலை உயர்வுக்குக் கண்டனம் - போராட்டம் நடத்திய வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பினர் கைது

கோவை, நவம்பர் 2: ரேசன் கடைகளில் விநியோகிக்கப்படும் சர்க்கரையின் விலை உயர்வைக் கண்டித்து ரேசன் அட்டைகளைத் திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். 

தமிழக குடிமை பொருள் அங்காடிகள் வழங்கப்பட்டு வந்த மானிய விலை சர்க்கரை கிலோ ரூ.13.50 இருந்து ரூ. 25 ஆக உயர்த்தி தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. இதற்கு, பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாகச் சர்க்கரை விலை உயர்வைக் கண்டித்து வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பு சார்பில் ரேசன் அட்டைகளைத் திரும்ப ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்பட்டது. 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அந்த அமைப்பைச் சேர்ந்தப் பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் அத்தியாவசிய பொருட்களை ரேசன் கடைகளில் சரிவர வழங்காததைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து, தங்களது ரேசன் அட்டைகளைத் திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற போது, தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களைக் கைது செய்தனர். இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...