தொடர் கனமழை எதிரொலி - 6 மாவட்டங்களில் 3-வது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை

நவம்பர் 2 : தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சென்னையில் பல இடங்களில் தண்ணீரில் தத்தளித்து வருகிறது. இதனால், 3-வது நாளாக இன்றும் 6 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

வங்க கடலின் மத்திய மேற்கு பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டதன் காரணமாக கடந்த 29-ம் தேதி முதல் தமிழக கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், சென்னையில் பல இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட சென்னை வெள்ளத்தை நினைவுபடுத்தும் விதமாக பல தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளன. இதை வெளியேற்ற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் நேற்று அறுந்து விழுந்திருந்த மின்சார வயரை மிதித்த இரு சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை மற்றும அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மழைக் காலங்களில் வீடுகளை விட்டு குழந்தைகளை வெளியே அனுப்ப பெற்றோர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். 

இதனிடையே, மேலடுக்கு சுழற்சி,  தற்போது நகர்ந்துள்ளதால் வடதமிழகத்தில் மழை அளவு குறைவும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. ஆனாலும், தென் தமிழகத்தில் மழை கடும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதன் அறிகுறியாக நெல்லை மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக பல சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 

தொடர் மழையின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, திருவாரூர் மற்றும் நெல்லை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவித்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இன்றும் தமிழகத்தில் பரவலாக மழை தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...