நொய்யல் மாரத்தான் ஓட்டப் பந்தய வீரர்களுக்கு மருத்துவ ஆதரவு சேவையை வழங்கிய ஆர்த்தோ-ஒன்

கோவை, நவம்பர் 2 : கோவையில் நடைபெற்ற நொய்யல் அரை மாரத்தான் நிகழ்வில் பங்கேற்ற ஓட்டப்பந்தய வீரர்களுக்கு ஆர்த்தோ-ஒன் மருத்துவ ஆதரவு சேவையை வழங்கியது. 

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள நீர்நிலைகளை, குறிப்பாக நொய்யல் ஆற்றை மாசில்லாமல் பாதுகாப்பது மீது விழிப்புணர்வை உருவாக்குவதற்காக இந்த மாரத்தான் நிகழ்வு நடைபெற்றது. இதில், 1000-க்கும் மேற்பட்டோர் அதிக உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். 

விளையாட்டு ஆர்வலர்களுக்கு மிக நவீன மருத்துவ கவனிப்பு சேவையையும், சிகிச்சையையும் வழங்குவதில் பிரபலமாக அறியப்படும் ஆர்த்தோ-ஒன், இதில் பங்கேற்ற ஓட்டப்பந்தய வீரர்களுக்கு ஓட்டப்பந்தய வழித்தடத்தில் ஏற்பட்ட காயங்களுக்கு முதலுதவியையும், சிகிச்சையையும் வழங்கியதுடன் மாரத்தான் நிகழ்வுக்கு முந்தைய தயாராகுதல் மற்றும் நிகழ்வுக்கு பிந்தைய தளர்வாக்கல் ஆலோசனை சேவையையும் வழங்கியது. 

இந்நிகழ்ச்சியின் போது ஆர்த்தோ-ஒன் நிறுவனர் டாக்டர். டேவிட் ஏ. ராஜன் கூறுகையில், இன்றைய காலகட்டத்தில் வாக்கத்தான் மற்றும் மாரத்தான் போன்ற நிகழ்வுகள் மக்கள் மத்தியில் அதிகளவு வரவேற்பையும், பங்கேற்பையும் பெற்று வருகின்றன. ஒரு சிறந்த நோக்கத்திற்காக நடத்தப்படும் இந்த மாரத்தான் நிகழ்வில் பங்கேற்க ஏராளமான எண்ணிக்கையில் மக்கள் வந்திருப்பதைக் காண்பது மகிழ்ச்சியளிக்கிறது. அனைத்து வயதுப் பிரிவுகளையும் சேர்ந்த நபர்கள் இந்நிகழ்வில் அதிக உற்சாகத்தோடு பங்கேற்றிருக்கின்றனர். இவர்கள் வெளிப்படுத்திய விளையாட்டின் மீதான ஆர்வமும், தாக்கமும் பெரிதும் பாராட்டுக்குரியது," 

மேலும், இந்த மாரத்தான் நிகழ்வில் ஒரு அங்கமாக பங்கேற்றதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இத்தகைய நிகழ்வுகளின் பங்கேற்பாளர்கள் சிரமமில்லாமல் இலக்கைச் சென்றடைவதற்கு நாங்கள் உதவ முடியும் என்பதால் இதுபோன்ற இன்னும் பல நிகழ்வுகளில் எமது சேவையை வழங்குவதை நாங்கள் ஆவலோடு எதிர்நோக்குகிறோம். என்றார். 

ஆர்த்தோ-ஒன் குறித்து: டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனத்தால் ஆர்த்தோ பெட்டிக்ஸ் (எலும்பு முடநீக்கவியல்) சிறப்புத்துறையின் கீழ் அகில இந்திய லைஃப் ஸ்டைல் மருத்துவமனை மற்றும் கிளினிக் தரவரிசை சர்வே நடத்தப்பட்டது. அதில், 2017-ல் தென்னிந்தியாவிலுள்ள முதன்மையான 10 மருத்துவமனைகளுள் ஒன்றாக ஆர்த்தோ-ஒன் தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...