அதிக கட்டணத்தை வசூலிக்கும் கல்லூரிக்கு எதிர்ப்பு - பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் கைது

கோவை, நவம்பர் 2 : கோவையில், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் செலுத்தினால் மட்டுமே மாற்றுச் சான்றிதழை வழங்க முடியும் எனக் கூறிய கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். 

கிணத்துக்கடவு இம்மிடிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் அசோக். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இவர் கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்து முடித்தார். இந்த நிலையில், அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட அதிகமாக ரூ.70 ஆயிரத்தைச் செலுத்தினால் மட்டுமே மாற்றுச் சான்றிதழ் வழங்க முடியும் என அந்தக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இது தொடர்பாக கோவை மாவட்ட நிர்வாகத்திடமும், ஆதி திராவிடர் நலத்துறையிலும் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாணவர் தரப்பில் கூறப்படுகின்றது. 



இந்த நிலையில், மாணவர் அசோக் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, கோரிக்கை அட்டை அணிந்து கையில் தட்டுடன் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார். மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் தொடர்ந்து படிக்க முடியவில்லை என்றும், இதனால் பிச்சை எடுத்து கட்டணத்தை செலுத்தப் போவதாகவும் தெரிவித்த மாணவர் அசோக், படிக்கும் போது கூடுதல் கட்டணத்தை கேட்காமல் தற்போது படித்து முடித்த பின் சான்றிதழ் வழங்க வேண்டிக் கோரிய நேரத்தில் முழு கட்டணத்தையும் கல்லூரி நிர்வாகம் கேட்பதாக குற்றம்சாட்டினார். 

மேலும், இது தொடர்பாக, அரசு அதிகாரிகள் பேசினாலும் கல்லூரி நிர்வாகம் மாற்றுச் சான்றிதழை கொடுக்க மறுப்பதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அசோக்கை காவல் துறையினர் கைது செய்து ரேஸ்கோர்ஸ் காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...