தமிழ்நாடு வேளாண்பல்கலையில் வரும் 6-ம் தேதி தேனீ வளர்ப்பு பயிற்சி

கோவை, நவம்பர் 2 :  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், பூச்சியியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் தேனீ வளர்ப்பு சம்பந்தமான ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகின்றது. 

நவம்பர் மாதத்திற்கான பயிற்சி வரும் 6-ம் தேதி (திங்கட்கிழமை) அன்று அளிக்கப்படும். 

•தேனீ இனங்களைக் கண்டுபிடித்தல் 

•பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் நிர்வாகம் 

•தேனீக்கு உணவு தரும் பயிர்கள் மற்றும் மகரந்த சேர்க்கை மூலம் மகசூல் அதிகரிக்கும் பயிர்களின் விவரம் 

•தேனைப் பிரித்தெடுத்தல் 

•தேனீக்களின் இயற்கை எதிரிகள் மற்றும் நோய் நிர்வாகம் 

பயிற்சியில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் பயிற்சி நாள் அன்று காலை 9.00 மணிக்குள்ளாக வேளாண் பூச்சியியல் துறைக்கு தங்கள் சொந்த செலவில் வந்து சேரவேண்டும். பயிற்சிக் கட்டணம் ரூ. 250 மட்டும். பயிற்சி நேரம் : காலை 10.00 முதல் மாலை 5.00 மணி வரை. பயிற்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும். 

மேலும் விவரங்களுக்கு அணுகவேண்டிய முகவரி : 

பேராசிரியர் மற்றும் தலைவர், 

வேளாண் பூச்சியியல் துறை, 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், 

கோயம்புத்தூர் - 641 003. 

தொலைப்பேசி 0422-6611214 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...