தாராபுரம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

கோவை, நவ.3: திருப்பூரிலிருந்து நேற்று இரவு தாராபுரம் நோக்கி வந்துகொண்டிருந்த காரும் பழனியிலிருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் திருப்பூரை சேரந்த நிதி நிறுவன ஊழியர் ராமநாதனின் மனைவி சத்யா, மற்றும் அவரது குழந்தைகள் 6 வயது மித்தின், 8 வயது துவாரிகா ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேய பலியானார்கள்.

இவ்விபத்தில் படுகாயமடைந்த ராமநாதனுக்கு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவத்துள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், "ராமநாதனின் சகோதரர் கண்ணன் என்பவர் திண்டுக்கல் மாவட்டம் இடையன்கோட்டையில் இறந்துவிட்டதால் அந்த துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள குடும்பத்துடன் காரில் சென்றபொழுது ஏற்பட்ட விபத்து இது ." 

இசம்பவம் அவர்களது உறவினர்களிடையே பெரும் அதிர்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மூன்றுபேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கபட்டுள்ளன.

இவ்விபத்து குறித்து கொண்டடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...