ஆனந்த சங்கம் அமைப்பு சார்பில் யோகா குறித்த புத்தகம் மற்றும் குறுந்தகடு நாளை வெளியீடு

கோவை, நவம்பர் 3 : கோவையில் ஆனந்த சங்கம் அமைப்பு சார்பில் யோகா குறித்த புத்தகம் மற்றும் குறுந்தகடு வெளியீட்டு விழா நாளை நடக்கிறது. 

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆனந்த சங்கம் யோகா அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதில், சுவாமி பரமஹம்ச யோகானந்தரின் நேரடி சீடர் கிரியானந்தாவின் குறிப்புகள் கொண்ட புத்தக வெளியீடு கோவையில் நாளை நடக்கிறது. இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு பிரஸ் கிளப் அரங்கில் நடைபெற்றது. 

இது தொடர்பாக அந்த அமைப்பின் நிர்வாகிகள் கூறும்போது, ஆனந்த சங்க அமைப்பானது, இந்தியாவில் டெல்லி, மும்பை, பூனே, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தனர் .உலகம் முழுவதும் அரை மில்லியன் சீடர்கள் இவ்வமைப்பில் உள்ளதாகவும், இந்தியாவில் இந்த அமைப்பு 14 ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்டு, தற்போது 20,000 பேர் உள்ளதாகத் தெரிவித்தனர்.



மேலும், தற்போது கிரியானந்த சீடர்களான நயசாமி ஜோதிஷ் மற்றும் தேவி கிரியை, யோகாவை உலகம் முழுவதும் கொண்டு செல்ல முயற்சி மேற்கொண்டு வருவதாகக் கூறினர். நாளை நடைபெறும் ஆத்மா ஆரோக்கியத்திற்கான உறுதி மொழிகள் என்ற புத்தகம் தமிழிலும், மை ஹார்ட் ரிமம்பர்ஸ் என்ற 2 புத்தகங்கள் நாளை வெளியிடப்படும் என்றனர். மேலும், 26-வது சர்வதேச திரைப்பட விழாவில் 17 விருதுகள் குவித்த “தி ஆன்சர்” யோகா குறித்த திரைப்பட குறுந்தகடு முதன்முறையாகக் கோவை - அவினாசி சாலையில் உள்ள ஜி.டி.அரங்கில் நாளை வெளியிடப்படும். என்றனர்.

இந்த நிகழ்ச்சியில், சி.பி.ஐ.முன்னாள் இயக்குநர் திரு. கார்த்திகேயன் கலந்து கொள்ள உள்ளார். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...