கோவையில் கந்துவட்டி கொடுமையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் - கட்சி சார்பற்ற விவசாயிகள் போலீஸ் கமிஷனர், கலக்டரிடம் மனு

கோவை, நவம்பர் 3: கோவை மாவட்டத்தில் தலைவிரித்து ஆடும் கந்து வட்டி கொடுமைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் துறை ஆணையரிடம் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தனர். 

இது தொடர்பாக சங்கத்தின் மாநில துணை தலைவர் ஏ.கே.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'கோவை மாவட்டத்தில் விவசாயத் தொழிலை நம்பி பல விவசாயிகள், சிறு வணிகர்கள் உள்ளனர். விளைச்சலின் போதும் வியாபரத்தின் போதும் அவர்களை நாடும் கந்துவட்டிக்கு பணம் கொடுப்பவர்கள், நயமாக பேசி பணத்தை கொடுக்கின்றனர். 



தொழிலில் நட்டம் ஏற்படும் போது குறிப்பிட்ட நபர்களால் உடனடியாக பணத்தை திரும்பச்செலுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. அந்த நேரத்தில் கந்து வட்டி கும்பல் அடியாட்களை வைத்து மிரட்டுவதோடு தகாதவார்த்தைகளில் பேசுகின்றனர். இதனால் பலர் தற்கொலை செய்துகொண்டு வருகின்றனர். 

இது முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும். இதை கருத்தில் கொண்டு இன்று கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளோம்.

மேலும், டாஸ்மாக் கடைகள் தவிர சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்க எடுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளோம்' என்றார். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...