டாஸ்மாக் கடைக்குள் ஊழியர் பிணம்

திருப்பூர், நவ.3; திருப்பூரில் பொதுமக்கள் எதிர்ப்பை மீறி திறக்கப்படட மதுபானக்கடைக்குள் கடை திறந்த அடுத்த நாளே டாஸ்மாக் ஊழியர் மர்மமான முறையில் மரணம் அடைந்த குறித்து போலீசார் தீவிர விசாரணை.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மங்களம் காவல் எல்லைக்கு உட்பட்ட பள்ளபாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை அப்பகுதி கிராம பொதுமக்கள் எதிப்பு காரணமாக அங்கிருந்து அகற்றப்பட்ட்து. 

அதன் பின்னர் காளிபாளையம் பகுதியில் இதே கடையை திறக்க முற்பட்டதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே அங்கிருந்து கடை அகற்றப்பட்டது . 

இதனிடையே டாஸ்மாக்கை, நிர்வாகம் கோம்பக்காட்டை அடுத்த தேவராயம்பாக்களையம் பகுதியில் சதீஸ் என்பவருக்கு சொந்தமான இடத்தில் புதியதாக கடை அமைக்கும் பணிகளை ஆரம்பித்தது . 

இதற்கும் அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று இதே பகுதியில் கடை திறக்கப்பட்டது. 

இந்த கடையில் ஊழியர்களாக ஈரோடு மாவட்டம் முத்தம்பாளையம் பகுதியை சேர்ந்த தவசியப்பன் மற்றும் தண்டபாணி, ஆரோக்கியசாமி ஆகியோர் விற்பனையில் ஈடுபட்டுவந்துள்ளனர். 

இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் இரவு 10 மணிக்கு கடையை அடைத்து விட்டு கடைக்குள் தவசியப்பனும், கடைக்கு வெளியே கடையின் ஊழியர் ஆரோக்கியசாமி மற்றும் வெளியாட்கள் 2 பேர் என தங்கியுள்ளனர். இதனிடையே காலை வழக்கம்போல் கடையை தட்டி தவசியப்பனை எழுப்ப ஆரோக்கியசாமி முயன்றுள்ளார். இருப்பினும் எந்த பதிலும் உள்ளே இருந்து வராததை அடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கடைக்குள் தவசியப்பன் இறந்து கிடந்துள்ளார்.



இதனை கண்டு அதிர்சசி அடைந்த ஊழியர் ஆரோக்கியசாமி இது குறித்து மங்களம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தவசியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

டாஸ்மாக் கடை பொதுமக்கள் எதிர்ப்பை மீறி திறக்கப்பட்டு ஒரே நாள் ஆன நிலையில் டாஸ்மாக்கை ஊழியர் மர்மமான முறையில் கடைக்குள் இருந்து பிணமாக மீட்கப்படட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...

FL2 Bar on Peelamedu-Vilankurichi Road Sealed Following Altercation Complaint

An FL2 liquor bar on Peelamedu-Vilankurichi Road in Coimbatore was sealed on September 8 following a police case over a...

விதிமீறல்: பீளமேடு மதுபானக் கூடத்திற்கு சீல் வைப்பு

கோவை பீளமேடு FL.2 மதுபானக் கூடத்தில் மோதல் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, உறுப்பினர் அல்லாதோருக்கு மது விற்பனை செய்ததாலும்...