பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினாப் போட்டிகள் அறிவிப்பு

கோவை, நவம்பர் 3 : ஐ.சி.எஸ்.ஐ. சார்பில் 10 முதல் 12-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினாப் போட்டிகள் வரும் 9-ம் தேதி நடத்தப்படுகிறது.

கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஐ.சி.எஸ்.ஐ.யானது டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. சென்னை, கொல்கத்தா, மும்பை, டெல்லி ஆகிய 4 மண்டலங்களை கொண்டுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 69 அத்தியாயங்களில் 50,000 உறுப்பினர்களும், 4.5 லட்சம் மாணவர்கள் செயலாளர்கள் மட்டத்திலான படிப்பை படித்து வருகின்றனர். 

இந்த நிலையில்,  கோவை அத்தியாயத்தின் 10-ம் ஆண்டுவிழாவையொட்டி, ”கார்ப்பரேட் வினாடி, வினாப் போட்டிகள் 2017” என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினாப் போட்டிகள் வரும் 9-ம் தேதி நடத்தப்படுகிறது. பீளமேடு அருகே உள்ள ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், அறிவியல் அரங்கில் நடக்கும் இந்தப் போட்டியில் 10 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...