வால்பாறையில் தொடர்ந்து உலா வரும் காட்டு யானைகள் - தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பீதி


கோவை, நவம்பர் 4 : கோவை மாவட்டம் வால்பாறைப் பகுதியில் யானைகள், தேயிலைத் தோட்டங்களில் உலா வருவதால் தேயிலை பறிக்கும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தொழிலாளர்கள் வேதனையடைந்துள்ளனர். 

வால்பாறையை அடுத்த பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் குடியிருப்புகளுக்குள் கடந்த சில மாதங்களாகக் காட்டு யானைகள் நுழைந்து அட்டகாசம் செய்து வருகின்றன. குறிப்பாக, ரேசன் கடைகளை இடித்து சூறையாடின. இதுமட்டுமல்லாமல் நள்ளிரவு நேரங்களில் குடியிருப்புகளை உடைத்தும் அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால், தொழிலாளர்கள் நாளுக்கு நாள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில், அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். 



இந்த நிலையில், மாணிக்கா எஸ்டேட்டில் உள்ள ரேசன் கடையை காட்டு யானைகள் உடைத்து அரிசி மூட்டைகளைச் சேதப்படுத்தின. அப்பகுதியில் டீ கடை நடத்தி வரும் கரீம் என்பவரது கடையை உடைத்து உள்ளே இருந்த பொருட்களை நாசம் செய்தது. சத்தம் கேட்டு அங்கு விரைந்த பொதுமக்கள் கூச்சலிட்டு அந்தக் காட்டு யானைக் கூட்டத்தை அருகிலுள்ள வனப்பகுதிக்குள் விரட்டினார்கள். 



இதேபோல, தாய்முடி உள்ளிட்ட பகுதிகளில் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தேயிலை தோட்டத்திற்குள் யானைகள் நுழைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால், தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டது. உடனே அங்குப் பணிபுரிந்த தொழிலாளர்கள் வேறு தேயிலை தோட்டத்திற்குப் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இப்பகுதியில் 11 காட்டு யானைகளைக் கொண்ட கூட்டம் தொடர்ந்து முகாமிட்டு வருகிறது. அதனை அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...