மேம்பாலப் பணிகளை துரிதமாக முடிக்காவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதம் - தே.மு.தி.க.

கோவை, நவம்பர் 4: கோவையில் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்காவிட்டால் மக்களைத் திரட்டி சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தே.மு.தி.க.வினர் தெரிவித்துள்ளனர்.

எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, பீளமேடு, போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் தாமதமாவதைக் கண்டித்து கோவையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாகக் கோவை மாவட்ட தே.மு.தி.க. சார்பில் கோவை ரயில்நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது. முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களைத் தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, பேசிய அக்கட்சியின் மாவட்ட செயலாளர் காட்டன் செந்தில், "எஸ்.ஐ.எச்.எஸ் காலனி பகுதியில் மூடப்பட்ட அரசு மதுபான கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் அவ்வழியே செல்லும் கல்லூரி, பள்ளி மாணவிகள் மற்றும் குடியிருப்புவாசிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், தாமதமாகும் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்காவிட்டால் மக்களைத் திரட்டி தமிழக அரசுக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்", என்றார்.



இதையடுத்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற தே.மு.தி.க.வினரை போலீஸார் கைது செய்தனர். இந்தப் போராட்டத்தின் காரணமாகக் கோவை ரயில் நிலையம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்ததால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...