அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் அளிக்க ஆதார் எண் கட்டாயம்..? - குடியரசுத் தலைவருக்கு வலியுறுத்தி இணையதள கையெழுத்துப் பிரச்சாரம்

கோவை, நவம்பர் 4: நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க ஆதார் எண் கட்டாயம் என்ற சட்டத்தை இயற்ற வலியுறுத்தி பொதுமக்கள் சார்பில் கையெழுத்துப் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

திரு.பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்று கறுப்புப் பணம் ஒழிப்பதாகும். இதன் நடவடிக்கைகளாக, கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பழைய ரூ.500, ரூ1000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன. மேலும், பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவித்த மத்திய அரசு, வங்கிக் கணக்கு மற்றும் தொலைபேசி எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகிறது. இந்த நடவடிக்கையின் மூலமாக, அரசுக்கு தெரியாமல், யாரும் பணப்பரிமாற்றம் செய்ய முடியாது. 

இந்த நிலையில், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகளை அளிக்க ஆதார் எண் கட்டாயப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் இருந்து குரல் எழுந்துள்ளது. கறுப்புப் பண நடவடிக்கையில் ஈடுபடும் மத்திய அரசு, ஏன் இதில் கவனம் செலுத்தவில்லை என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 

ஆதார் எண் கட்டாயம் என சட்டம் கொண்டு வந்துவிட்டால், இனிவரும் காலங்களில் ரொக்கமாகப் பணப்பரிமாற்றம் நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி யாரும் கேள்விக் கனைகளை முன்வைக்க முடியாது . அவர்களுக்கான ஒரே பதில், மத்திய அரசின் பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க வேண்டும் என்பதுதான். பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் பிரதமர் மோடி மற்றும் அவரது கட்சியான பா.ஜ.க, மற்றக் கட்சிகளுக்கு முன் உதாரணமாக, நன்கொடைகளை, டிஜிட்டல்மயமாக்கல் மூலம் பெற்றால் சிறப்பான ஒன்றாக இருக்கும். 

இந்த நிலையில், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க ஆதார் எண் கட்டாயம் என்ற சட்டத்தை இயற்ற வலியுறுத்தி பொதுமக்கள் சார்பில் கையெழுத்துப் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. 

பணமதிப்புழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நவம்பர் 8-ம் தேதி கறுப்புப் பணத் தடுப்பு தினம் அனுசரிக்க உள்ளதாக மத்திய நிதியமைச்சர் திரு.அருண்ஜேட்லி அண்மையில் அறிவித்திருந்தார். அன்றைய தினத்திற்கு முந்தைய தினம் சென்றடையுமாறு, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க ஆதார் எண் கட்டாயம் என்பதை வலியுறுத்தி குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத்கோவிந்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. 

இந்த இணையதளக் கையெழுத்து பிரச்சாரமானது, நாடு முழுவதும் பிரபலமாகி வருகிறது. தற்போது வரை 2,600-க்கும் மேற்பட்டோர் இதில் கையெழுத்திட்டுள்ளனர். இன்னும் 4 நாட்கள் எஞ்சியிருப்பதால், உறுதியாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதற்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க ஆதார் எண் கட்டாயம் என்பற்கு பல்வேறு மக்கள் ஒன்றிணைந்து குரல் கொடுப்பதால், குடியரசுத் தலைவர் உறுதியாக ஏதேனும் நடவடிக்கை எடுப்பார் என நம்பப்படுகிறது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...