இந்த வாரம் முதல் உயர்கல்வி குறித்த தகவல்கள் உடனுக்குடன் உங்கள் சிம்ப்ளிசிட்டியில்..

கோவை, நவம்பர் 6: கோவையில் நடக்கும் பல்வேறு முக்கிய செய்திகள் மற்றும் நிகழ்வுகளை உடனுக்குடன் வழங்கி வரும் சிம்ப்ளிசிட்டி செயலியில், தற்போது,  உயர்கல்வி தொடர்பான செய்திகளை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது . இதற்கென ”EduCity” என்ற தனி பத்தி உருவாக்கப்பட்டுள்ளது. அதில்,  வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் உயர்கல்வி தொடர்பான செய்திகளை  தலைமையாசிரியர் மற்றும்  தலைமை நிரூபர் அமுதா கண்ணன் வழங்க இருக்கிறார்.   

கோவையின் பிரபல ஹிந்து நாளிதழின் முன்னாள் நிரூபராக பணியாற்றிய அவர், உயர்கல்விக் குறித்த தகவல்களை பல ஆண்டுகளாக வழங்கி வந்தார். தமிழகத்தில் உயர்கல்விக்கு பெயர்போன கோவையில், 7 பல்கலைக்கழகங்களும், ஏராளமான கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன  .  இதனால், உயர்கல்வியைப் பயில்வதற்கு அண்டை மாநிலங்களில் இருந்தும், ஏராளமானோர் கோவைக்கு வருகின்றனர். 

இந்த நிலையில், இம்மாதம் 13ம்  தேதி முதல்    நமது சிம்ப்ளிசிட்டி செயலியில்,  கல்வி நிறுவனங்கள் பற்றியும், அவற்றின் கொள்கைகள் குறித்தும் விரிவாக பதிவிடப்பட இருக்கிறது. இந்த நடவடிக்கை மாணவர்களுக்கும், கல்வி குறித்த நெறியாளர்களுக்கும் சிறப்பான ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...