தங்கத்தை கெமிக்கல் பவுடராக மாற்றிக் கடத்த முயன்ற விமானப் பயணி கைது


கோவை, நவம்பர் 6: வெளிநாட்டில் இருந்து உடலில் மறைத்து தங்கத்தை எடுத்து வந்த பயணியை கோவை விமான நிலையத்தில் வைத்து சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். 



இலங்கை, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக தங்கம், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் போதைப் பொருட்கள் கோவை வழியாக இந்தியாவிற்குக் கடத்தப்படுவது நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சார்ஜாவில் இருந்து இன்று அதிகாலை கோவை விமான நிலையத்திற்கு வந்த ஏர் அரேபியா விமானப் பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். 



அப்போது, அப்துல் கரீம்(38) என்ற பயணி, தனது இருகால்களிலும் காயமடைந்ததற்கு மருத்துவக் கட்டு போட்டிருந்தார். அவரது நடையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், கரீமை பிடித்து தீவிர சோதனையிட்டனர். அவரது மருத்துவக் கட்டை பிரித்துப் பார்த்த போது, 6 தங்கக்கட்டிகளைப் பொடியாக்கி, கெமிக்கல் பவுடராக மாற்றி அதில் வைத்திருந்தார். இதனைக் கண்டு பிடித்த சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், 700 .கிராம். தங்கத் துகள்களை கடத்தி வந்ததை கரீம் ஒப்புக் கொண்டார். அந்த தங்க பௌடெரின் மதிப்பு 26 லட்ச ரூபாயாகும். 



அதனைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நடப்பாண்டில், கோவை விமான நிலையத்தில் மட்டும் ரூ.3.69 கோடி மதிப்புடைய 12.145 கி.கி எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதில், 9.5 கி.கி எடை அளவு தங்கம், இலங்கையில் இருந்து வந்த பயணிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...