கிராமத்தில் சுற்றித் திரிந்த கழுதைப்புலிக்கு மருத்துவர்கள் சிகிச்சை

ஈரோடு, நவம்பர் 6: பவானிசாகர் வனப்பகுதியில் உடல்நலம் குன்றியநிலையில் சுற்றித்திரிந்த கழுதைப்புலிக்கு சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.



ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பவானிசாகர் வனப்பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கழுதைப்புலி ஒன்று சுற்றித்திரிந்தது. இதைக்கண்ட கிராம மக்கள் உடனடியாக பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.



இதையடுத்து, வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கழுதைப்புலியை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். இந்நிலையில், விரட்டியடிக்கப்பட்ட கழுதைப்புலி மீண்டும் சோர்வுடன் சுற்றித்திரிந்தது. இதனால், பவானிசாகர் வனச்சரகர் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் உடல்நலம் குன்றிய நிலையில் இருந்த கழுதைப்புலியை பிடித்து கால்நடை சிகிச்சை மையத்திற்கு கொண்டு வந்தனர்.



பின்னர், வனத்துறை கால்நடை மருத்துவர் கே.அசோகன் உடல்நலம் குன்றிய கழுதைப்புலிக்கு சிகிச்சை அளித்தார். இதுகுறித்து அவர். கூறியதாவது : இந்த கழுதைப்புலிக்கு சுமார் 10 வயது இருக்கும். இது ஆண் கழுதைப்புலி. புலியின் பற்கள் சேதமடைந்ததால் நீண்டநாள் உணவு எடுத்துக்கொள்ளாமல் இருந்துள்ளது. மேலும், காதில் புழுக்கள் பிடித்துள்ளதால் சிகிச்சை அளிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றார்.



மேலும் அவர் கூறுகையில், உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ள இந்த கழுதைப்புலிக்கு தொடர்ந்து சிகிச்சைகள் வழங்கி கண்காணித்து வருகின்றோம். மாமிசம் மற்றும் செர்லாக் உள்ளிட்ட ஆரோக்கியமான உணவுகள் வழங்கப்படுகிறது. 

இந்தியாவில், குறிப்பாக தென் இந்தியாவில் இதுபோன்ற கழுதைப்புலிகள் குறைவாகவே காணப்படுகின்றன. ஆப்பிரிக்க கழுதைப் புலிகள் பெரும்பாலும் இங்கு காணப்படுவதில்லை. கழுதைப்புலிக்கு கால்நடை மருத்துவர்களால் சிகிச்சை வழங்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும் என்றார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...