கோவை அரசு மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழுந்து கார் சேதம் : பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம் காரணமா?

கோவை, நவம்பர் 6: கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கட்டிடத்தின் ஒரு பகுதி இன்று இடிந்து விழுந்ததில் அருகில் நின்று கொண்டிருந்த காரின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.



கோவை அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரத்திற்கு மேற்பட்ட உள் மற்றும் வெளி நோயாளிகள்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இந்த மருத்துவமனையின் கட்டிடங்கள் மிக மோசமான நிலையில் இருப்பதோடு, நோயாளிகள் தங்குவதற்கான இடவசதி மிகவும் குறைவாக இருப்பதாக புகார் எழுந்தது.

இதை தொடர்ந்து, அம்மருத்துவமனை வளாகத்தில் ரூ.55 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்டும் பணி கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கியது. தொடர்ந்து கடந்த ஆண்டு புதிய கட்டிடங்கள் திறக்கப்பட்டன. 

பழைய கட்டிடங்களில் இருந்த பல்வேறு வார்டுகள் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டன. 

அப்போது நரம்பியல் துறை வார்டும் புதிய கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து பழைய நரம்பியல் துறை வார்டில் அரசு மருத்துவமனை ஆவண காப்பகம் மற்றும் குழந்தைகள் பிரிவு செயல்பட்டுவருகிறது.

இந்த நிலையில், கட்டிடத்தின் முன் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த 'சன்சைடு' (Sunshade) இன்று மதியம் திடீரென் இடிந்து விழுந்தது. 



இந்த விபத்தில் கட்டிடத்தின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த பெண் மருத்துவர் ஒருவரின் காரின் முன்பக்க கண்ணடி உடைந்து சேதமடைந்தது. 

பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இப்பகுதியில் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்த சம்பவம் அம்மருத்துவமனைக்கு வந்துசெல்வோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.



இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'அரசு மருத்துவமனையில் செயல்படும் பழைய கட்டிடங்களில் முதன்மையாக புனரமைக்கப்பட வேண்டிய கட்டிங்களுள் ஒன்றாக நரம்பியல் துறையின் பழைய கட்டிடம் இருக்கிறது. இந்த கட்டிடத்தை புனரமைக்க வேண்டும் என்று மருத்துவமனை முதல்வர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார். ஆனால், இதுவரையில் கட்டிடத்தை புனரமைக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கவில்லை' என்றார். 

பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் அரசு மருத்துவமனையில் கட்டிடம் பழுதாகியுள்ளது என்றும், உடனடியாக புனரமைக்கப்பட வேண்டும் என்றும் மருத்துவ அதிகாரிகள் பொதுப்பணித் துறைக்கு தகவல் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அவர்களின் அலட்சியப்போக்கை காட்டுவதாகவும் இந்த விபத்திற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...