கந்துவட்டி கொடுமையால் பெண் தற்கொலை முயற்சி

கோவை, நவம்பர் 6: கோவையில் கந்து வட்டி கொடுமையால் இளம் பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை செம்மேடு பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் கூலித் தொழிலாளி. இவரது மனைவி நித்யா (35). இந்த தம்பதியினருக்கு நான்கு வயதில் மகன் உள்ளார். 

இந்த சூழலில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கி முன் நித்யா வீடு கட்டும் பணியை தொடங்கினார். இதற்காக செம்மேடு பகுதியை சேர்ந்த நிஷா என்பவரிடம் ரூ.1.5 லட்சம் கடன் பெற்றதாக தெரிகிறது.

அதே நேரத்தில் நித்யாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரால் குறித்த நேரத்தில் கடனை திருப்பிச்செலுத்த முடியவில்லை. இதன் காரணமாக நிஷா அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த நித்யா நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சாணிப்பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

பணி முடிந்து வீடுதிரும்பிய பாலகிருஷ்ணன் நித்யா மயங்கிக் கிடப்பதை பார்த்து கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச்சென்றார். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஆலந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...