2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு தேதி மீண்டும் ஒத்திவைப்பு

நவம்பர் 7: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் தீர்ப்பு தேதி இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் தேதியினை மீண்டும் ஒத்திவைத்து சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி.ஷைனி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கி வழங்கியதில் ரூ.1.70 லட்சம் கோடி முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இதில், முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக மாநிலங்களவை எம்.பி. கனிமொழி ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படுகின்றனர்.

தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 6 வருடங்களாக நடைபெற்று வரும் இந்த வழக்கின் தீர்ப்பு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் இருந்து மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து, அந்த தேதி இன்று (நவம்பர் 7) அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், சில ஆவணங்களைத் தயார் செய்ய வேண்டி இருப்பதால் தீர்ப்பு தேதி வரும் டிசம்பர் 5-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தீர்ப்புகள் தயார் செய்ய இன்றும் 3 வாரங்கள் தேவைப்படுகிறது என்பதால் தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி  ஷைனி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பிரதமர் திரு. நரேந்திர மோடி திங்களன்று திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. மேலும், இந்தச் சந்திப்பு 2ஜி ஊழல் வழக்கின் தீர்ப்பைப் பாதிக்கும் என்று அனைத்துத் தரப்பினராலும் விவாதிக்கப்பட்டு வந்த நிலையில் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது அத்திருப்தியை   ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...