நீலகிரியில் அரிய வகை புள்ளி ஆந்தை மீட்பு


நீலகிரி, நவம்பர் 7: நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தினுள் நுழைந்த புள்ளி ஆந்தை பிடிக்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

நீலகிரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலக கேன்டீனில் ஆந்தை ஒன்று பிடிபட்டது. ஆந்தையை அங்கு பணிபுரிபவரும், வன ஆர்வலருமான ரமேஷ் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.



பாம்புகளை பிடிப்பதில் திறமை வாய்ந்த ரமேஷ் இந்த ஆந்தை குறித்து கூறுகையில், இது அரிய வகை புள்ளி ஆந்தை. மலை பிரதேசங்களை விட சமவெளி பகுதிகளிலேயே அதிகளவில் இருக்கும். எலிகளை விரும்பி உண்ணும் இந்த ஆந்தை முதல் நாள் பிடித்து சாப்பிட்ட உணவை மறுநாள் வாய்வழியாகவே வெளியேற்றி விட்டு புதிய உணவை உண்ணும் பழக்கத்தை கொண்டவை என்றார்.

இதுபோன்ற பறவை, விலங்குகள் குறித்து பல்வேறு தகவல்களை அறிந்துள்ள ரமேஷ், பாம்புகளை பிடிப்பதில் திறமையானவர் என்பதும், பரதநாட்டியத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...