டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்


பல்லடம், நவம்பர் 7: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற கோரி விசைத்தறிகளை நிறுத்தி ஊர் பொதுமக்கள் ஆயிரக்கனக்கானோர் காலவரையற்ற உண்ணாவிரதம் துவங்கினர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பள்ளபாளையம் பகுதியில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை நீதிமன்ற உத்தரவை அடுத்து அங்கிருந்து அகற்றப்பட்டது. 

இதனை அடுத்து காளிபாளையத்தில் திறக்கப்பட்ட இக்கடை அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக அடைக்கப்பட்டு கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தேவராயம்பாளையத்தில் சதீஸ்குமார் என்பவருக்கு சொந்தமான இடத்தில் திறக்கப்பட்டது.

இந்நிலையில் இப்பகுதியில் குடியிருந்து வரும் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்திற்கும் டாஸ்மாக் நிர்வாக த்திற்கும் புகார் மனு அளித்தனர். 

இதனிடையே டாஸ்மாக் கடையை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இன்று அப்பகுதி பொதுமக்கள் சுமார் 5000 த்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளை நிறுத்தி ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து தனியார் மண்டபத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகள் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக அகற்றவேண்டும் என்றும் அதுவரை போராட்டம் தொடரும் என்றும் கூறியுள்ளனர்.

பொதுமக்களின் இப்போராட்டம் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...