கேபிள் கம்பிகள் அறுந்து கீழே விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

பீளமேடு பகுதியில் உள்ள செங்காளியப்பன் நகர் (வார்டு எண். 38) அருகே அமைந்துள்ள ரயில்வே மேம்பாலத்தில், கேபிள் கம்பிகள் அறுந்து கீழே விழுந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.



இன்று அதிகாலை மேம்பாலத்தை ரயில் கடந்து செல்லும்பொழுது அதிர்வு தாங்காமல் கேபிள் கம்பிகள் அறுந்து விழுந்ததாகவும், ரயில்வே மேம்பாலம் முறையாக பராமரிக்கப் படாததால் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருவதாகவும் இப்பகுதி மக்கள் புகாரளித்தனர்.



'அதிகாலை நேரத்தில் கம்பிகள் அறுந்து விழுந்ததால் விபத்துகள் ஏற்படவில்லை. ஆனால், அறுந்து விழுந்த கம்பிகள் மின்கம்பிகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தால் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு காத்திருந்தனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின் பொதுமக்கள் சிலர், அவற்றை சோதித்து, சாலையோரமாக ஒதுக்கிவைத்தனர்' என்று கூறினார் இப்பகுதியில் வசிக்கும் திரு. சண்முகம்.



காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் இப்பகுதியை கடந்து வேலைக்கு செல்பவர்களும், பள்ளி செல்லும் மாணவர்களும் கடும் சிரமத்தை சந்தித்துள்ளனர். மேலும், வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டியுள்ளதால் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகமாகிக்கொண்டே இருக்கின்றது. 

பல மணி நேரமாக கீழே விழுந்த கேபிள் கம்பிகள் அகற்றப்படாத நிலையில், தற்போது இப்பகுதிக்கு வந்த ரயில்வே ஊழியர்கள் கேபிள் கம்பிகளை அகற்றி, போக்குவரத்தை சரிசெய்து வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...