கந்துவட்டி கொடுமையில் இருந்து காப்பாற்றக்கோரி கோவை மாநகர காவல் ஆணையரிடம் 5 பேர் மனு

கோவை, நவம்பர் 7: கந்துவட்டிக் கொடுமையில் இருந்து தங்களை காப்பாற்றுமாறு கோவை மாநகர காவல் ஆணையர் திரு. அமல்ராஜிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.



சவுரிபாளையம் பகுதியில் சுப்ரமணி என்பவர் கந்துவட்டி தொழில் செய்து வருகிறார். இவரிடம், குருராசன், மணிகண்டன், விஜயேந்திர பூபதி, கார்த்திகேயன், ரெஜிஸ் சாந்தகுமார் ஆகிய ஐந்து பேரும் தொழில் தொடங்கக் கந்துவட்டிக்கு பணம் வாங்கியுள்ளனர். இதில், குருராசன் என்பவர் ரூ.1.80 லட்சம் வாங்கியதாகவும், இதுவரை ரூ.7.89 லட்சம் வட்டி மட்டுமே கட்டிவிட்டதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதேபோல, வாங்கிய தொகையை விட 3 மடங்கு தொகையை மற்ற அனைவரும் கட்டி விட்ட பிறகும், இன்னும் பணம் வேண்டும் என சுப்ரமணி தங்களை மிரட்டுவதாகப் பாதிக்கப்பட்ட 5 பேரும் இன்று (நவம்.,7) கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். 

தொழில் துவங்க ரூ.7 லட்சம் பணம் வாங்கி தற்போது வரை 10 மடங்கு அதிகமாக பணம் கட்டியும், மேலும், ரூ.20 லட்சம் செலுத்துமாறு சுப்ரமணி வீட்டிற்கு வந்து மிரட்டுவதாக மணிகண்டன் புகார் தெரிவித்தார். மேலும், வட்டிக்கு பணம் வாங்கும் போது உறுதிமொழி பத்திரம், நிரப்பப்படாத மூன்று காசோலைகள் என பல்வேறு உறுதி தாள்களை வாங்கி வைத்துக்கொண்டு தங்களை தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...